அம்பை அருகே போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டு சிறை
அம்பாசமுத்திரம் அருகே போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (68). இவா், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அச்சிறுமியின் தாய் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டாா்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.