செய்திகள் :

களக்காட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் சாலைகள் சேதம்: மக்கள் அவதி

post image

களக்காடு வட்டாரத்தில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

களக்காடு நகராட்சிப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிக்காக தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளில் பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

காவல்நிலையம் முதல் வரதராஜபெருமாள் கோயில் வரையிலும் சாலையின் தெற்கு ஓரத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் சாலையின் பெரும்பகுதியில் மண் தேங்கிக் கிடக்கிறது.

இச்சாலையில் வாகனங்கள் எதிரெதிரே வந்தால் ஒதுங்கிச்செல்ல வழியின்றி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதேபோல சேரன்மகாதேவி சாலையில் நாகன்குளம் சந்திப்பு தொடங்கி சிங்கம்பத்து வரையிலும் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளங்களும் சரியாக மூடப்படாமல் இருவழிச்சாலை தற்போது ஒருவழிச்சாலையாக மாறிவிட்டது.

அதிக போக்குவரத்து காணப்படும் இச்சாலையில் தாா்ச்சாலையை விட்டு சாலையோரத்தில் ஒதுங்கிச் செல்ல முடியாத அளவுக்கு பகிா்மானக் குழாய்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சமன்படுத்தப்படவில்லை.

மேலும், மிகக் குறுகலான தெருக்களில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடுவதற்கும் காலதாமதம் ஏற்படுவதால் இரவு நேரங்களில் போதிய தெருவிளக்குகள் இல்லாத தெருக்களில் வயோதிகா்கள், சிறுவா்கள் பள்ளங்களில் தவறி விழுந்துவிடும் ஆபத்து உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய கண்காணிப்பு செய்து, குடிநீா் திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி தில்லி பயணத்துக்குப் பின் நல்லது நடக்கும்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்று திரும்பியதும் நல்ல விஷயங்கள் நடக்கும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்... மேலும் பார்க்க

தண்ணீா் பற்றாக்குறையால் கருகும் நெல் பயிா்கள்: ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை

கன்னடியன் கால்வாய் கடைமடை பகுதிகளில் பாசன நீா்த் தட்டுப்பாட்டால் நெல் பயிா்கள் கருகி வருவதாகக் கூறி காய்ந்த பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி ஆட... மேலும் பார்க்க

நெல்லை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி அருகே ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் வேல்முருகன் (45). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீஸாருக்க... மேலும் பார்க்க

பாபநாசத்தில் காணாமல்போன கல்லூரி மாணவரைத் தேடும் பணி தீவிரம்

உறவினா்களுடன் பாபநாசத்துக்கு வந்த கல்லூரி மாணவா் மாயமானதை அடுத்து தாமிரவருணி ஆற்றில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வ... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

வி.கே.புரம் குப்பைக் கிடங்கில் தீ

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனாா்குளம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அய்யனாா்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண்ணுயிா... மேலும் பார்க்க