செய்திகள் :

லக்ஷ்மி டென்டல் பங்குகளை வாங்கிய ஐசிஐசிஐ புருடென்ஷியல்!

post image

புதுதில்லி: ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, இன்றைய வர்த்தகத்தில் திறந்த பரிவர்த்தனைகள் மூலம் லக்ஷ்மி டென்டலில் கிட்டத்தட்ட 3 சதவிகித பங்குகளை சுமார் ரூ.49 கோடிக்கு வாங்கியுள்ளது.

மொத்த பரிவர்த்தனையால், லக்ஷ்மி டென்டலின் பங்குகள் 0.25 சதவிகிதம் உயர்ந்து. என்எஸ்இ-யில் ரூ.306.70 ஆகவும், முடிவில் பங்குகள் 0.93 சதவிகிதம் சரிந்து பிஎஸ்இ-யில் ரூ.303.25 ஆக நிறவடைந்தது.

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயின் மொத்த ஒப்பந்த தரவுகளின்படி, ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் என்எஸ்இ-யில் 8.62 லட்சம் ஈக்விட்டி பங்குகளை வாங்கிய நிலையில், மேலும் 7.38 லட்சம் பங்குகளை கைபற்றியது. இதனையடுத்து நிறுவனத்தின் மொத்த கையிருப்பு 2.91 சதவிகிதமாக உயர்ந்தது. அதன் பரிவர்த்தனை சுமார் ரூ.48.51 கோடி ஆகும். சராசரியாக ரூ.303 விலையில் இந்த பரிவர்தனை செயல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், அபுதாபி முதலீட்டு நிர்வகமானது, மொத்தம் 11.16 லட்சம் லட்சுமி டென்டலின் பங்குகளை ரூ.33.82 கோடிக்கு விற்பனை செய்தது. விற்பனைக்குப் பிறகு லட்சுமி டென்டலில் அபுதாபி முதலீட்டு 3.18 சதவிகிதத்திலிருந்து 1.15 சதவிகிதமாகக் சரிந்தது.

பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் தலா ரூ.303 முதல் ரூ.303.01 வரை வர்த்தகமானது.

இதையும் படிக்க: ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

புதுதில்லி: உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவிகிதமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் குறித்த கவலைகள் மற்றும் வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கைகளுக்கு இடையில், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 6 காசுகள் உயர்ந்த... மேலும் பார்க்க

காளையின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

மும்பை: ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதன் காரணமாக, இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 119 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி ... மேலும் பார்க்க

ஆட்டோ பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

பங்குச் சந்தைகள் இன்று(திங்கள்கிழமை) சரிவுடன் தொடங்கிய நிலையில் தற்போது ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,925.51 என்ற புள்ளிகளில் ஏற்... மேலும் பார்க்க

ஐபோன் 17 ஏர்: செப்.19 முதல் இந்தியாவில் விற்பனை!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 ஏர் மாடலை அறிமுகப்படுதியுள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்லிம் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். தனது தயாரிப்புகளில் புதுவித மாடல்களை அளித்துப் புரட்சியை ஏற... மேலும் பார்க்க

விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க