செய்திகள் :

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

post image

புதுதில்லி: உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவிகிதமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

மொத்த விலை பணவீக்கம் ஜூலை மாதத்தில் -0.58 சதவிகிதமாகவும் அதே வேளையில் ஜூன் மாதத்தில் -0.19 சதவிகிதமாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.25 சதவிகிதமாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்களின் எதிா்மறை பணவீக்கம் 6.29% இருந்து 3.06 சதவிகிதமாகக் குறைந்தது. காய்கறிகளில் எதிா்மறை பணவீக்கம், ஜூலையில் 28.96 சதவிகிதமாக இருந்து ஆகஸ்டில் 14.18 சதவிகிதமாகக் குறைந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகஸ்ட் மாதத்தில் அதன் பணவீக்கம் 2.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது அதன் முந்தைய மாதத்தில் 2.05 சதவிகிதமாக இருந்தது. அதே வேளையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் ஜூலை மாதத்தில் 2.43 சதவிகிதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 3.17 சதவிகித எதிர்மறை பணவீக்கம் கண்டது.

சில்லறை பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் முக்கிய கொள்கை விகிதங்களை 5.5 சதவிகிதமாக மாற்றாமல் வைத்திருந்தது.

நவம்பர் 2024 முதல் ஒன்பது மாதங்கள் வரை குறைந்து வந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கம் 2.07% ஆக உயர்ந்தது. இதற்கு காய்கறிகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததே காரணம்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் குறித்த கவலைகள் மற்றும் வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கைகளுக்கு இடையில், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 6 காசுகள் உயர்ந்த... மேலும் பார்க்க

காளையின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

மும்பை: ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதன் காரணமாக, இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 119 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி ... மேலும் பார்க்க

ஆட்டோ பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

பங்குச் சந்தைகள் இன்று(திங்கள்கிழமை) சரிவுடன் தொடங்கிய நிலையில் தற்போது ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,925.51 என்ற புள்ளிகளில் ஏற்... மேலும் பார்க்க

ஐபோன் 17 ஏர்: செப்.19 முதல் இந்தியாவில் விற்பனை!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 17 ஏர் மாடலை அறிமுகப்படுதியுள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்லிம் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். தனது தயாரிப்புகளில் புதுவித மாடல்களை அளித்துப் புரட்சியை ஏற... மேலும் பார்க்க

விலை குறையும் ஹீரோ இருசக்கர வாகனங்கள்

ஜிஎஸ்டி வரி குறைப்பின் எதிரொலியாக தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைக்க இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: டிவிஎஸ் மோட்டார் தேவை அதிகரிப்பு!

கொல்கத்தா: ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புக்கு பிறகு தேவையை அதிகரிக்கும் என்றது டிவிஎஸ் மோட்டார்ஸ்.புதிய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு, டிவிஎஸ் 150 சிசி ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க