செய்திகள் :

Waqf: வக்ஃப் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு; என்ன சொல்கிறார்?

post image

பாஜக கூட்டணி அரசு கடந்த ஏப்ரலில் நிறைவேற்றிய வக்ஃப் திருத்த மசோதா 2025-க்கு எதிராக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விரித்து வந்த உச்ச நீதிமன்றம், வக்ஃப் சட்ட திருத்தத்தை செயல்படுத்த இடைக்கால தடைவிதித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், "ஒரு நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டுமே வக்பு வழங்க முடியும் என்ற திருத்தத்திற்கு தடை.

வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கு மேல் இருக்கக் கூடாது.

வக்ஃப் நிலம் தொடர்பாக மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்கும் வகையில் ஆட்சியருக்கு அத்தகைய அதிகாரங்களை வழங்குவதற்கு தடை" என தடைகளை விதித்தது.

Waqf | வக்ஃப் திருத்த மசோதா
Waqf | வக்ஃப் திருத்த மசோதா

மேலும், "முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழுமையான முகாதிரங்களை காண முடியவில்லை" என்ற உச்ச நீதிமன்றம், "வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முடிந்தவரை இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அனுமதிக்கும் திருத்தத்தை நிறுத்தி வைக்க முடியாது" என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.

அந்தப் பதிவில் ஸ்டாலின், "ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.

இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

வஃக்ப் திருத்தச் சட்டம்: "விஜய் தலைமையில் மனு, மகத்தான வெற்றி" - தவெக அறிக்கை!

வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளது தமிழக வெற்றிக் கழகம். மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் சட்டதிருத்தத்த... மேலும் பார்க்க

”பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை, கூட்டணியை ஏற்க வாய்ப்பில்லை”- டி.டி.வி.தினகரன்!

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``செங்கோட்டையன் ... மேலும் பார்க்க

"விஜய்க்கு ஆதரவு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" - சொல்கிறார் கார்த்தி சிதம்பரம்

"கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் டெல்லி செல்வது அவர்களுடைய மைனஸாக உள்ளது. அதை விட மிகப்பெரிய மைனஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது..." என்று அதிமுக குறித்து விமர்சித்துள்ளார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கா... மேலும் பார்க்க

"சசிகலா விடுதலையாகி வரும்போது கூட விடிய விடிய கூட்டம் வந்தது" - விஜய் பிரசாரம் குறித்து பி.மூர்த்தி

"திமுகவுக்காகப் பிரசாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்" என்று அமைச்சர் பி.மூர்த்தி பேசியுள்ளார்.தவெக தலைவர் விஜய்மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.மூர்த்தி, ... மேலும் பார்க்க

அதிமுக: "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" - என்ன சொல்கிரார் சசிகலா?

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது ந... மேலும் பார்க்க

``வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்'' - அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்

கோவை காளப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 11 ஏக்கர் நிலம் வாங்கியிருந்ததாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் இரண்டு நாள்களுக்கு முன் விளக்கம் அளித்திரு... மேலும் பார்க்க