செய்திகள் :

``வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்'' - அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்

post image

கோவை காளப்பட்டியில் கடந்த ஜூலை மாதம் 11 ஏக்கர் நிலம் வாங்கியிருந்ததாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அவர் இரண்டு நாள்களுக்கு முன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் கோ.தேவராஜன், அண்ணாமலை மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்ணாமலை தனது வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, நிதி மோசடியிலும் ஈடுபட்டிருக்கிறார் என அவர் கூறியுள்ளார். இதற்காக அண்ணாமலைக்கு எதிராக புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அவரது புகாரில், “பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி திருமதி அகிலா ஆகியோர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தமை மற்றும் நிதி மோசடி குறித்தும் விசாரணை செய்ய வேண்டும்.

மேலும், குண்டர் சட்டத்தின் படி கைது செய்ய வேண்டும். சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். அண்ணாமலை மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நடத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் நிலையில், அண்ணாமலை மீது இப்படிப் புகார் எழுந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அதிமுக: "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" - என்ன சொல்கிரார் சசிகலா?

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது ந... மேலும் பார்க்க

``விஜய்க்கு கூடும் கூட்டம், 25 ஆண்டுகால உழைப்பால் வந்தது; ஆனால்'' - பிரேமலதா விஜயகாந்த் சொல்வதென்ன?

திருச்சி மணப்பாறை சாலையில் முள்ளிப்பாடி என்ற இடத்தில் 73 அடி உயரக் கொடிக்கம்பத்தில் தே.மு.தி.க. கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். ப... மேலும் பார்க்க

ஈரோடு: பெரியார் அண்ணா நினைவகத்தில் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்! - புகைப்படத் தொகுப்பு

ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈர... மேலும் பார்க்க

ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல... மேலும் பார்க்க

`காயிதேமில்லத் சொன்ன பாடத்தை ஏற்று நடந்தால் பாஜக நேர்வழியில் நடந்திருக்கும்!' - கனிமொழி

நெல்லை மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எழுச்சி மாநாடு, மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்தது. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “க... மேலும் பார்க்க

10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா செங்கோட்டையன்! - அதிமுக-வில் என்ன நடக்கிறது?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தே... மேலும் பார்க்க