செய்திகள் :

`காயிதேமில்லத் சொன்ன பாடத்தை ஏற்று நடந்தால் பாஜக நேர்வழியில் நடந்திருக்கும்!' - கனிமொழி

post image

நெல்லை மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எழுச்சி மாநாடு, மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்தது. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “காயிதேமில்லத் அன்றே சொன்ன பாடத்தை ஏற்று நடந்தால் பா.ஜ.க நேர்வழியில் நடந்திருக்கும். இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முன்னின்று போராடியவர்கள் இஸ்லாமியர்கள்.

மாநாட்டில் கனிமொழி

சி.ஏ.ஏ உள்ளிட்ட சட்டங்களைக் கொண்டு வந்தபோது அதனை எதிர்காமல் இஸ்லாமியர்களின் சகோதரன் எனக் கூறிய முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அதனை கொண்டு வந்துள்ள பா.ஜ.கவுடன் கூட்டணியில் உள்ளார். சி.ஏ.ஏ சட்டத்தை தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. முத்தலாக் தடை என்ற சட்டத்தை கொண்டு வந்து அச்சுறுத்துகின்றனர்.

வாக்குகளைக் காணவில்லை

மக்களுக்கும் நாட்டுக்கும் விரோதமாகச் செயல்படுபவர்கள்தான் பா.ஜ.கவினர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் என ஒன்றைக் கொண்டு வந்துள்ளனர். பல தொகுதிகளில் இஸ்லாமிய தலித் மக்களின் வாக்குகளைக் காணவில்லை.

கனிமொழி

பீகார் மாநிலத்தில் 55% பெண்களின் வாக்குகளைக் காணவில்லை. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பல மாநிலங்களில் இதே நடைமுறையைப் பின்பற்றியே தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்தியாவின் வருங்காலத்தை தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது. அது நடக்காது.” என்றார்.  

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஈரோடு: பெரியார் அண்ணா நினைவகத்தில் அண்ணா பயன்படுத்திய பொருட்கள்! - புகைப்படத் தொகுப்பு

ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈரோட்டில் பெரியார் அண்ணா நினைவகம்ஈர... மேலும் பார்க்க

ADMK: ``அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால்!?'' - ஓபிஎஸ் எச்சரிக்கை

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல... மேலும் பார்க்க

10 நாள் கெடு முடிந்தது, பலம் இழக்கிறாரா செங்கோட்டையன்! - அதிமுக-வில் என்ன நடக்கிறது?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 9-ஆம் தே... மேலும் பார்க்க

``புரிய வேண்டியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' - முடிந்த 10 நாள் கெடு; செங்கோட்டையன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்ற... மேலும் பார்க்க

``விஜய்-காங்கிரஸ் கூட்டணி? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்!'' - காங்., எம்.எல்.ஏ ராஜேஷ்குமார்

`விஜய் காங்கிரஸ் மீது மரியாதை கொண்டவர்'சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்காக்குழியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாமில் கலந்துகொண... மேலும் பார்க்க