செய்திகள் :

கோவை தண்டவாளத்தில் குழந்தை பிணம்: நரபலி சந்தேகத்தில் போலீஸார் விசாரணை!

post image

கோவை இருகூர் அருகே தண்டவாளத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை பிணமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடலை கைபற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை, அடுத்த இருகூர், ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் குழந்தை பிணமாகக் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குத் தண்டவாளத்தில் ஒன்றரை வயதான ஆண் குழந்தை பிணமாகக் கிடந்தது. உடனே காவல் துறையினர் அந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கு இடையே அந்த குழந்தையின் உடல் அருகே மஞ்சள், குங்குமம், வெட்டப்பட்ட கோழியின் உடல் ரத்தம் ஆகியவை கிடந்தது. இதனால் அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவியது ஒன்றரை வயது குழந்தை தண்டவாளப் பகுதியில் நடந்து செல்ல வாய்ப்பில்லை, எனவே அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம், என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் குழந்தையின் உடல் கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கல்வி பிடிக்கவில்லை, இது குறித்து காவல் துறையினர் கூறும்போது.ஒன்றரை வயதுக் குழந்தை எப்படி? உயிரிழந்தது என்பது தெரியவில்லை, ரயிலில் சென்றபோது குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது, அதற்கான எந்த அடையாளமும் இல்லை, அதற்கான வாய்ப்பு அந்த பகுதியில் இல்லை, எனவே அந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்றும் காவல் துறை தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The shocking incident of a one-and-a-half-year-old child found dead on the tracks near Irukur.

இதையும் படிக்க:வக்ஃப் சட்டம்: ஆட்சியர் அதிகாரம் உள்பட சில விதிகளுக்கு இடைக்காலத் தடை!

கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கி 38 ஆண்டுகள் நிறைவு

கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா் ஹரிஹரன் கூறியதாவது: இந்திய அஞ்சல் துறையில் கடந்த 1986 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 -ஆம் தேதி எக்ஸ்ப... மேலும் பார்க்க

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள வேலப்புழாவைச் சோ்ந்தவா் மஜீத் (50). இவா், கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள கோட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கள்ளிமடை

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வா... மேலும் பார்க்க

அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலம்: அக்டோபா் 9-ல் முதல்வா் திறந்துவைக்கிறாா்!

கோவை- அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 9-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். கோவை, காந்திபுரத்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் அருகேயுள்ள சங்கனூா் தில்லை நகரைச் சோ்ந்தவா் மாா்டின் பிரபு (34). ஏசி மெக்கானிக்கான இவா், நல்லாம்பாளைய... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: சிவசேனாவை சோ்ந்த 37 போ் கைது

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சிவசேனா கட்சியைச் சோ்ந்த 37 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். துபையில் ஞாயிற்றுக்கிழமை இ... மேலும் பார்க்க