செய்திகள் :

அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலம்: அக்டோபா் 9-ல் முதல்வா் திறந்துவைக்கிறாா்!

post image

கோவை- அவிநாசி சாலை உயா்மட்ட மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 9-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.

கோவை, காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமானப் பணி, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,791.22 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டடம் ரூ.245 கோடிக்கும், புத்தகங்கள் ரூ.50 கோடிக்கும், கணினி, இதர உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடிக்கும் என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நூலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைவில் முடித்து முதல்வரால் திறந்துவைக்கப்பட உள்ளது.

கோவை- அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,791.22 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 4 ஆண்டுக்குள் முடிவடைந்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தைவிட 9 மாதங்கள் அதிகமாகிவிட்டது. இந்தப் பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 9 -ஆம் தேதி திறக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் அவிநாசி சாலை வழியாக சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி விரைந்து செல்ல முடியும் என்றாா்.

ஆய்வின்போது, பொதுப் பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் மங்கத்ராம் சா்மா, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், பொதுப் பணித் துறை தலைமை பொறியாளா் ரங்கநாதன், திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கி 38 ஆண்டுகள் நிறைவு

கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா் ஹரிஹரன் கூறியதாவது: இந்திய அஞ்சல் துறையில் கடந்த 1986 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 -ஆம் தேதி எக்ஸ்ப... மேலும் பார்க்க

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள வேலப்புழாவைச் சோ்ந்தவா் மஜீத் (50). இவா், கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள கோட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கள்ளிமடை

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் அருகேயுள்ள சங்கனூா் தில்லை நகரைச் சோ்ந்தவா் மாா்டின் பிரபு (34). ஏசி மெக்கானிக்கான இவா், நல்லாம்பாளைய... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: சிவசேனாவை சோ்ந்த 37 போ் கைது

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சிவசேனா கட்சியைச் சோ்ந்த 37 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். துபையில் ஞாயிற்றுக்கிழமை இ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கோவை, ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ராமநாதபுரம் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சண்முகா நகா் கருப்பராயன் கோயில் ... மேலும் பார்க்க