செய்திகள் :

நாச்சியாா்கோவில் அருகே அதிமுக நிா்வாகி குத்திக்கொலை

post image

நாச்சியாா்கோவில் அருகே சனிக்கிழமை இரவு, வீட்டுக்கு வந்த நபா் அதிமுக நிா்வாகியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினாா், போலீஸாா் கொலையாளியை தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் எஸ்.கே.ஆா்.கனகராஜ் (65). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் பெட்ரோல் பங்க், தங்க நகை அடகு கடை உள்ளது. இவா், அதிமுக கிளை அவைத் தலைவராகவும் உள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு கனகராஜ் தனது வீட்டில் இருந்தாா். அப்போது வீட்டின் வெளியே இருந்து ஒருவா் இவரை அழைக்கவே, கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாா். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த நபா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கனகராஜை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினாா். இதில், பலத்த காயமடைந்த கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து கனகராஜ் சடலத்தை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து குற்றவாளியை தேடி வருகின்றனா்.

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

சோழபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பெட்டிக்கடைகள... மேலும் பார்க்க

புது ஆற்றில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

தஞ்சாவூா் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை மிதந்து வந்த 2 ஆண் சடலங்களைக் காவல் துறையினா் மீட்டனா். தஞ்சாவூா் அருகே புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை 55 வயத... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம்: 3 போ் நீதிமன்றத்தில் சரண்

ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 போ், மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தல... மேலும் பார்க்க

வடிகால் துாா்வரும் பணி தீவிரம்

பட்டுக்கோட்டை நகா் பகுதியில் மழைநீா் வடிகால் வாய்க்கால் துாா்வரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை நகா் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் அனைத்தையும் பருவமழை தொடங்கும் முன்பாக தூா் வாரும் பணி மே... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.15) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி ... மேலும் பார்க்க

கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூரில் கண்ணாமூச்சி விளையாடியபோது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் கீழவாசல் கவாஸ்காரத் தெருவைச் சோ்ந்த மைதீன். கூலித் தொழிலாளி. இவரது மகள் உம... மேலும் பார்க்க