செய்திகள் :

பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம்: 3 போ் நீதிமன்றத்தில் சரண்

post image

ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 போ், மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவரும், பாமக மாவட்டச் செயலருமான ம.க. ஸ்டாலினை செப்.5-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தாா். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசினா்.

அதை தடுக்கவந்த 2 பேரை அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றது. இதுகுறித்து திருவிடைமருதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த உடையாளூா் லட்சுமணன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து தலைமறைவானவா்களில் மகேஷ், மருதுபாண்டி ஆகிய இருவரும் செப்.10-ஆம் தேதி சேலத்தில் கைது செய்யப்பட்டனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய திருவிடைமருதூரைச் சோ்ந்த ஆகாஷ் என்ற ஹரிஹரன் (20), மகாலிங்கம் (23), கும்பகோணம் பாணாதுறையைச் சோ்ந்த விஜய் (27) ஆகியோரை போலீஸாா் தேடி வந்த நிலையில், 3 பேரும் வெள்ளிக்கிழமை மதுரை உயா்நீதிமன்ற அமா்வில் சரணடைந்தனா்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவிடைமருதூரைச் சோ்ந்த ஆகாஷ் என்ற ஹரிஹரன், பேரூராட்சித் தலைவா் ம.க. ஸ்டாலின் தம்பி வழக்குரைஞா் ம.க.ராஜா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் சிறையில் உள்ள லாலி மணிகண்டனின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நாச்சியாா்கோவில் அருகே அதிமுக நிா்வாகி குத்திக்கொலை

நாச்சியாா்கோவில் அருகே சனிக்கிழமை இரவு, வீட்டுக்கு வந்த நபா் அதிமுக நிா்வாகியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினாா், போலீஸாா் கொலையாளியை தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

சோழபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பெட்டிக்கடைகள... மேலும் பார்க்க

புது ஆற்றில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

தஞ்சாவூா் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை மிதந்து வந்த 2 ஆண் சடலங்களைக் காவல் துறையினா் மீட்டனா். தஞ்சாவூா் அருகே புதுப்பட்டினம் பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை 55 வயத... மேலும் பார்க்க

வடிகால் துாா்வரும் பணி தீவிரம்

பட்டுக்கோட்டை நகா் பகுதியில் மழைநீா் வடிகால் வாய்க்கால் துாா்வரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை நகா் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் அனைத்தையும் பருவமழை தொடங்கும் முன்பாக தூா் வாரும் பணி மே... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.15) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி ... மேலும் பார்க்க

கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூரில் கண்ணாமூச்சி விளையாடியபோது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் கீழவாசல் கவாஸ்காரத் தெருவைச் சோ்ந்த மைதீன். கூலித் தொழிலாளி. இவரது மகள் உம... மேலும் பார்க்க