செய்திகள் :

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

post image

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17), பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாகத் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் புதினுக்கு நன்றி எனவும், உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்புகளையும் செய்ய தயாராக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: 140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

Russian President Vladimir Putin has wished Prime Minister Narendra Modi a happy birthday over the phone.

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 12 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.17) சரண்டைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 12... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடம்ப மரக் கன்று ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17) பாஜக ஆளும் மா... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், வெள்ளத்தில் தனது சைக்கிள் சேதமானதற்கு அழுத 6 வயது சிறுவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார். பஞ்சாபில் வெள்ளத... மேலும் பார்க்க

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகள் பற்றிய கதையை பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து பகிர்ந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, சர்வதேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%... மேலும் பார்க்க

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

கர்நாடகத்தில் யூ டியூப் சேனல்கள் தொடங்கவும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கர்நாடகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை... மேலும் பார்க்க