செய்திகள் :

மகாராஷ்டிரா தேர்தல்: உத்தவ் - ராஜ் தாக்கரே கூட்டணி? கலக்கத்தில் காங்கிரஸ்; உத்தவ் சொல்வது என்ன?

post image

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் மேயர் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக இரண்டு தலைவர்களும் கடந்த சில மாதங்களில் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே நேரடியாக ராஜ் தாக்கரே இல்லத்திற்குச் சென்று ராஜ் தாக்கரேயுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்துள்ளார்.

இதில் இரு தலைவர்களும் மும்பை, நாசிக் போன்ற மாநகராட்சிகளில் எத்தனை வார்டுகளில் போட்டியிடுவது என்பது குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே
உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே

இதையடுத்து, ராஜ் தாக்கரேயுடனான கூட்டணியை விரைவில் அறிவிக்கப்போவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், ''ராஜ் தாக்கரேயுடனான கூட்டணி குறித்து விரைவில் சரியான நேரத்தில் அறிவிப்பேன்.

பிரதமர் நரேந்திர மோடி வேண்டுமானால் என்னை விரோதியாக நினைக்கலாம். ஆனால் நான் அவரை விரோதியாக நினைக்கவில்லை. ஆனால் அவர் சிவசேனாவை அழிக்க முயற்சிக்கும் அரசியலை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

அவர் மனதில் தவறான எண்ணம் இருந்தாலும், அவர் மீதமுள்ள பதவிக் காலத்தில் நல்ல பணிகளைச் செய்ய நான் அவரை வாழ்த்துகிறேன். பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உத்தவ் கூறினார்.

தசரா பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு உத்தவ் தாக்கரே பதிலளிக்கவில்லை. உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைக்கும்பட்சத்தில் அது காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாக அமையும். தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே இருக்கிறார்.

தாக்கரே சகோதரர்கள் இணையும் போது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் வார்டுகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது. ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாகப் பிரிந்து இருந்தனர். இருவரும் பெரியப்பா மற்றும் சித்தப்பா மகன்கள் ஆவர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார்

திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில... மேலும் பார்க்க

திமுக முப்பெரும் விழா: "காலில் விழுந்த பிறகு முகத்தை மறைக்க கர்சிஃப் எதற்கு?" - EPS-ஐ சாடிய ஸ்டாலின்

கரூரில் தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது (செப்டம்பர் 17).இந்த விழாவில், பெரியார் விருது கனிமொழிக்கும், அண்ணா விருது சுப. சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது சோ.மா. ராமச்சந்திரனுக்கும், பாவேந... மேலும் பார்க்க

காசா: தலையிலும் மார்பிலும் பாய்ந்த தோட்டாக்கள்; குழந்தைகள் குறிவைத்துக் கொல்லப்பட்டது அம்பலம்

காசாவில் இஸ்ரேல் ராணுவம் குழந்தைகளைக் கொலை செய்வது தவறுதலான நிகழ்வு அல்ல, திட்டமிடப்பட்ட தாக்குதல் என வெளிநாட்டு மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.நிபுணர்கள் சொல்வதென்ன?அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக... மேலும் பார்க்க

கோயில் யானை விவகாரம்: "அம்பானியின் வந்தாரா சரணாலயத்திற்கு மாற்றுவதில் தவறில்லை" - சுப்ரீம் கோர்ட்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத்தில் நடத்தும் வந்தாரா விலங்கியல் பூங்காவில், நூற்றுக்கணக்கான யானைகள், புலிகள் மற்றும் பிற விலங்குகள் உள்ளன.குஜ... மேலும் பார்க்க

"இந்திராகாந்தி - பண்டாரநாயக்கா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த லாயக்கற்ற பாஜக அரசு" - வேல்முருகன்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், 'மீனவர்களின் விசைப்படகுகளும், பின்னால் இருக்கும் அவலங்களும்' என்ற தலைப்பில் மத்திய அரசைக் கண்டித்து க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "ஜனவரிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்" - உச்ச நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிராவில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட தொடர் மாற்றம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்குவது ... மேலும் பார்க்க