செய்திகள் :

'கண்ணுக்குத் தெரியாத' வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி; இன்ஃப்ளூயன்சருக்கு வந்த சோதனை!

post image

அமெரிக்காவின் புகழ்பெற்ற 'கண்ணுக்குத் தெரியாத வீட்டில்' (Invisible House) தங்கியிருந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவருக்கு செல்ஃபி எடுத்ததற்காக சுமார் 8.7 லட்சம் ரூபாய் ($10,000) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் ஜோஷுவா ட்ரீ தேசியப் பூங்காவில் அமைந்துள்ள இந்த 'கண்ணுக்குத் தெரியாத வீடு' அதன் தனித்துவத்திற்காக பெயர்பெற்றது.

பாலைவனச் சூழலுடன் ஒன்றிணைந்து, கண்ணுக்குப் புலப்படாதது போன்ற தோற்றத்தை அளிப்பதால் இது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஒரு இரவு தங்குவதற்கு இதன் வாடகை சுமார் $2,400 (சுமார் 2.1 லட்சம் ரூபாய்) ஆகும்.

இந்த நிலையில் டேவிஸ் என்ற இன்ஃப்ளூயன்சர் இந்த வீட்டில் தங்கியுள்ளார். அப்போது அவரது நண்பரின் காதலி வீட்டின் குளியலறையில் ஒரு செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்களின் வீட்டை முன் அனுமதியின்றி வர்த்தக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுக்கக் கூடாது என்பது அவர்களின் முக்கிய விதியாகும். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட செல்ஃபியை அவர்கள் விளம்பர நோக்கம் கொண்டதாகக் கருதி, டேவிஸின் பில்லில் $10,000 அபராதமாகச் சேர்த்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்கள் தரப்பில், தங்கள் வீட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கவே இதுபோன்ற கடுமையான விதிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர். ஆனால் விருந்தினர் தரப்பில் அது ஒரு தன்னிச்சையான தனிப்பட்ட புகைப்படம் என்றும், எந்த பிராண்டையும் விளம்பரப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர்.

invisible house

கண்ணாடி வீடு ஏன் பிரபலம்

இந்த வீட்டின் வெளிப்புறம் முழுவதும் கண்ணாடியால் ஆனது. அதனால், சுற்றியுள்ள பாலைவனத்தின் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது, அந்த இடத்தில் ஒரு வீடே இல்லாதது போலத் தெரியும். அதனால்தான் இதற்கு 'கண்ணுக்குத் தெரியாத வீடு' என்று பெயர். இது ஒரு விடுமுறை விடுதி போல செயல்படுகிறது. சினிமா பிரபலங்கள், நடிகர்கள் என பலர் இங்கு வந்து தங்குகின்றனர். சினிமா மற்றும் விளம்பரப் படப்பிடிப்புகளுக்கும் இந்த வீட்டை வாடகைக்கு விடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Egypt: அருங்காட்சியகத்தில் இருந்த 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு மாயம் - பின்னணி என்ன?

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருந்து, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற... மேலும் பார்க்க

பால் தாக்கரே மனைவி சிலை மீது சிவப்பு பெயிண்ட்டை ஊற்றிய மர்ம நபர்; மும்பை தாதர் பகுதியில் பதற்றம்

மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதான வளாகத்திற்கு வெளியில் ஒரு நுழைவு வாயிலில் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயின் மார்பளவு சிலை இருக்கிறது. சிவாஜி பார்க் எப்போதும் பிஸியாகவ... மேலும் பார்க்க

50,000 தேனீக்களுடன் நட்பு; உடலை மூடிய தேனீக்கள், ஆனாலும் கொட்டவில்லை - உ.பியில் நடந்த விநோத சம்பவம்

தேனீக்கள் என்றாலே, நம்மில் பலருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். அதன் கொடுக்குகள் ஏற்படுத்தும் வலியும், வீக்கமும் இதற்குக் காரணம். தேனீயைப் பார்த்தாலே தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தேனீ... மேலும் பார்க்க

Mumbai Monorail: ``சேவையை மேம்படுத்த தற்காலிகமாக மோனோ ரயிலை நிறுத்துகிறோம்'' - மஹாராஷ்டிரா அரசு

இந்தியாவில் மும்பையில் மட்டுமே மோனோ ரயில் சேவை அமலில் உள்ளது. மும்பை செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை இந்த மோனோ ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. இதனால் மாந... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் : ரத்ததானம் பெற்றதில் வைரஸ் தொற்று, 25% கல்லீரலுடன் வாழ்கிறேன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் இன்னும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். திரைப்படங்கள், கோன்பனேகா குரோர்பதி டிவி நிகழ்ச்சி, விளம்பரங்கள், சோசியல் மீடியா என்று தன்னை எப்போதும் உற்சாகமாக... மேலும் பார்க்க

Uttar Pradesh: `இரு முறை கடித்தால் முகாம்களில் அடைப்பு' - தெருநாய் பிரச்னைக்கு புதிய நெறிமுறைகள்

தெருநாய்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. டெல்லியில் தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பின்னர் தனது உத்தரவை திருத... மேலும் பார்க்க