செய்திகள் :

Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

post image

கடந்த 12ஆம் தேதி அதிகாலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் இருக்கும் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் திஷா பதானியின் தந்தையும், முன்னாள் போலீஸ் அதிகாரியுமான ஜெகதீஷ் பதானி இது தொடர்பாக போலீஸில் புகார் செய்திருந்தார்.

இதையடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக உடனே நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.

இத்துப்பாக்கிச்சூட்டிற்கு கோல்டி பிரார் கேங் பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவிப்பு வெளியிட்டது.

வீரேந்திர சரண் என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில்,''ஆன்மீக தலைவர்களை அவமதித்துவிட்டனர். மதத்திற்கு அவமரியாதை செய்துவிட்டனர். இது ஆரம்பம் தான் என்று குறிப்பிட்டு இருந்தனர். வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சுட்டு இருந்தனர்.

இத்துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து போலீஸார் தீவிர ஆய்வு செய்தபோது இச்செயலில் ஈடுபட்டது ரவீந்திரா மற்றும் அருண் என்று தெரியவந்தது. உடனே அவர்களைத் தேட ஆரம்பித்தனர்.

இப்பணியில் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா போலீஸார் இணைந்து செயல்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய இரண்டு பேரும் காஜியாபாத்தில் இருப்பது தெரியவந்தது.

உடனே அவர்கள் இரண்டு பேரையும் மூன்று மாநில சிறப்புப் படை போலீஸாரும் சுற்றிவளைத்தனர். ஆனால் இரண்டு பேரும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீஸார் எதிர்த்தாக்குதல் நடத்தியபோது இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.

திஷா பதானி, குற்றவாளிகள்

அவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் இறந்துவிட்டனர்.

மதகுரு அனிதாச்சாரியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு திஷா பதானியின் மூத்த சகோதரி குஷ்பு பதானி பதிலடி கொடுத்திருந்தார்.

எனவேதான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கோல்டிபிரர் கேங்க் தெரிவித்திருந்தது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு 238 கிரிமினல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ராணுவ உடையில் வந்தவர்கள் கைவரிசை: SBI ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சடாச்சன் என்ற இடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குள் மூன்று பேர் திடீரென நுழைந்தனர். அவர்கள் ராணுவ சீருடையில் இருந்தனர். அவர்களது கையில் ஆயு... மேலும் பார்க்க

ஜப்பானில் தரையிறங்கிய போலி கால்பந்து அணி - நாடுகடத்திய அதிகாரிகள்! - என்ன நடந்தது?

பாகிஸ்தானிலிருந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஜப்பானுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாகிஸ்தானின் சியல்கோட் விமான நிலையத்திலிருந்து ஜப்பான் சென்றடைந்த கால்பந்தாட்ட குழு மீது... மேலும் பார்க்க

சேலம்: அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்; இருவர் கைதின் பின்னணி என்ன?

சேலம் மாநகரில் ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. சேலம் உயிரியல் பூங்காவிலிருந்து ஈரடுக்கு பழைய பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் ஓட்டுநராக தனபால் என்பவரும், நடத்துநராக திர... மேலும் பார்க்க

10 வருட காதலுக்குப் பெண் வீட்டார் எதிர்ப்பு; இளைஞர் ஆணவப் படுகொலை - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசிப்பவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். வைரமுத்து டூவீலர் மெக்கானிக். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண்.... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்தில் திருட்டு; தலைமை அர்ச்சகர் தலைமறைவு

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பலரால் கோயிலுக்கு வெள்ளி குடங்கள், வாளிகள், தாம்பூலங்கள், பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன... மேலும் பார்க்க

காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த தாய்; மகள் காதலுக்கு எதிர்ப்பு - ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர்

மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவைச் சேர்ந்த குமார்-ராஜலட்சுமி தம்பதியரின் மகன் வைரமுத்து, டிப்ளமோ படித்தவுடன் டூவீலர் மெக்கானிக் வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குமார்-வ... மேலும் பார்க்க