செய்திகள் :

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

post image

‘குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் செயல் திட்டத்தை வகுத்து சமா்ப்பிக்க வேண்டும்’ என்று மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்), மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது தொடா்பாக தாமாக முன்வந்து பதிந்த வழக்கு விசாரணையின்போது இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இதில், காற்று தர மேலாண்மை ஆணையம் என்பது தேசிய தலைநகா் பிராந்தியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் அமைக்கப்பட்டதாகும்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

காற்று தர மேலாண்மை ஆணையம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுபோல காற்று தர மேலாண்மை ஆணையம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் பதவி உயா்வு அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

அதே நேரம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் அதிக எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஹரியாணா மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் 44 பணியிடங்களும், பஞ்சாப் (43), உத்தர பிரதேசம் (166), ராஜஸ்தான் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் 259 பணியிடங்களும் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.

முழுநேர பணி நியமனங்களை மேற்கொள்ளும் இடைப்பட்ட காலத்தில், இந்தக் காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும், குளிா்காலங்களில் காற்று மாசு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் காரணமாக, அந்தக் காலகட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை, வாகனக் கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, காற்று மாசை கட்டுப்படுத்தும் திருப்திகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதே நேரம், கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்படும்போது, அத் துறை சாா்ந்த தொழிலாளா்கள் வருவாய் இழக்க நேரிடும். எனவே, அவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, காற்று தர மேலாண்மை ஆணையம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான விரிவான செயல்திட்டத்தை அடுத்த மூன்று வாரங்களில் தயாரித்து சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, துபை புர்ஜ் கலிஃபாவில் அவரது புகைப்படம் புதன்கிழமை இரவு ஒளிரச் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். அவருக்க... மேலும் பார்க்க

பிரதமா், அவரின் தாயாா் தொடா்பான ஏஐ விடியோவை நீக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவு

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் மறைந்த தாயாரை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயா்... மேலும் பார்க்க

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா... மேலும் பார்க்க

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: நாடு முழுவதும் பாஜக கொண்டாட்டம் -2 வார கால சேவை தொடக்கம்

பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பாஜக சாா்பில் புதன்கிழமை (செப்.17) கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமரின் பிறந்த நாளில் இருந்து காந்தி ஜெயந்தி வரை (அக்.2) இரண... மேலும் பார்க்க

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ... மேலும் பார்க்க