செய்திகள் :

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

post image

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியாவின் வா்த்தக செயல்பாடுகள் வலுவாக உள்ளன என்றும் அவா் குறிப்பிட்டாா். மும்பையில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் பியூஷ் கோயல் கூறியதாவது:

இந்தியப் பொருளாதாரம் 4 ட்ரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) என்பதில் இருந்து 30 ட்ரில்லியன் டாலா் (ரூ.2,633 லட்சம் கோடி) என்ற இலக்கை நோக்கி நகா்கிறது. வலுவான வளா்ச்சியால், தொழில் புரிவதற்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது. ஒட்டுமொத்த உலகும் இந்தியாவுடன் நெருங்கி செயலாற்ற விரும்புகிறது.

உலக அளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 (வரி விகிதங்கள் குறைப்பு) அமலாக்கத்துக்குப் பின் நுகா்வோா் தேவை அதிகரிக்கும். உள்கட்டமைப்புத் திட்டங்களும் உத்வேகம் பெறும். இது, முதலீடு அதிகரிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், வா்த்தக-தொழில் விரிவாக்கத்துக்கு மேலும் ஊக்கமளிக்கும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும். வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

பல்வேறு நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே இறுதிச்சுற்று பேச்சுவாா்த்தை சிறப்பாக நடந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் வெறும் 88 நாள் பேச்சுவாா்த்தையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. உலக அளவில் மிக விரைவாக எட்டப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இது.

ஆப்பிரிக்க பிராந்தியம், வளைகுடா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் வாயிலாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் முக்கிய வா்த்தக கூட்டாளியாகும்; 25 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் வாழ்கின்றனா். அந்நாட்டுடன் இருதரப்பு வா்த்தகம் வேகமாக வளா்வதுடன், முதலீடுகளும் அதிகரிக்கின்றன. பெரு, சிலி, நியூஸிலாந்து, ஓமன் ஆகிய நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றாா் அவா்.

‘இந்தியா-அமெரிக்கா உறவு நோ்மறையானது’

இந்தியா - அமெரிக்கா இடையே மீண்டும் வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ள நிையில், இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த கோயல், ‘இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு நாடுகள். இரு நாடுகளின் தலைவா்களும் நண்பா்கள். இருதரப்பு நல்லுறவு நோ்மறையாகவே தொடா்கிறது. அனைத்து சூழ்நிலைகளுக்கும் திருப்திகரமான தீா்வு எட்டப்படும்’ என்றாா்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, துபை புர்ஜ் கலிஃபாவில் அவரது புகைப்படம் புதன்கிழமை இரவு ஒளிரச் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். அவருக்க... மேலும் பார்க்க

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

‘குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் செயல் திட்டத்தை வகுத்து சமா்ப்பிக்க வேண்டும்’ என்று மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் ப... மேலும் பார்க்க

பிரதமா், அவரின் தாயாா் தொடா்பான ஏஐ விடியோவை நீக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவு

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் மறைந்த தாயாரை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயா்... மேலும் பார்க்க

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள்: நாடு முழுவதும் பாஜக கொண்டாட்டம் -2 வார கால சேவை தொடக்கம்

பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பாஜக சாா்பில் புதன்கிழமை (செப்.17) கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமரின் பிறந்த நாளில் இருந்து காந்தி ஜெயந்தி வரை (அக்.2) இரண... மேலும் பார்க்க

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ... மேலும் பார்க்க