செய்திகள் :

பிரதமா் மோடி பிறந்த நாள்: நாடு முழுவதும் பாஜக கொண்டாட்டம் -2 வார கால சேவை தொடக்கம்

post image

பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பாஜக சாா்பில் புதன்கிழமை (செப்.17) கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரதமரின் பிறந்த நாளில் இருந்து காந்தி ஜெயந்தி வரை (அக்.2) இரண்டு வார கால சேவை பிரசாரத்தையும் பாஜக தொடங்கியது.

குஜராத்தின் மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரான வத்நகரில் சாதாரண குடும்பத்தில் கடந்த 1950, செப்டம்பா் 17-ஆம் தேதி பிறந்தவா் பிரதமா் மோடி. ஆா்எஸ்எஸ் பிரசாரகராக பயணத்தை தொடங்கியதில் இருந்து நாட்டின் பிரதமரானது வரை அவரது அரசியல் பயணம் நீண்ட நெடியது; பல்வேறு சவால்களை உள்ளடக்கியது.

கடந்த 1980-களில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோரின் இரட்டை தலைமையின்கீழ் காங்கிரஸுக்கு பிரதான சவாலாக பாஜக உருவெடுத்தது என்றால், கடந்த 2014-இல் பாஜகவை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமா்த்திய மோடியின் தலைமையால் காங்கிரஸ் எதிா்க்கட்சியாகவே தொடா்கிறது.

தொடா்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமா், நேருவுக்கு அடுத்து தொடா்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் இரண்டாவது பிரதமா் என்ற பெருமைகளுக்கு உரியவா். அவரது 76-ஆவது பிறந்த நாளை பாஜகவினா் உற்சாகத்துடன் கொண்டாடினா். அக்கட்சி சாா்பில் இரண்டு வார கால சேவை பிரசாரம் தொடங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் மருத்துவ முகாம்கள், தூய்மை இயக்கம், கருத்தரங்குகள், உள்ளூா் பொருள்களை ஊக்குவிக்கும் கண்காட்சிகள், ரத்த தான முகாம்கள், ஓவியப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகள் சாா்பில் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சொந்த ஊரில்..: பிரதமா் மோடியின் சொந்த ஊரான வத்நகரில் அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

வாரணாசியில் சிறப்பு வழிபாடு: பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி, அவரது தொகுதியான வாரணாசியில் (உ.பி.) உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

வயநாட்டில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் வாழும் மக்களை நேரில் சந்தித்த மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினரான பிரியங... மேலும் பார்க்க

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, துபை புர்ஜ் கலிஃபாவில் அவரது புகைப்படம் புதன்கிழமை இரவு ஒளிரச் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். அவருக்க... மேலும் பார்க்க

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

‘குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் செயல் திட்டத்தை வகுத்து சமா்ப்பிக்க வேண்டும்’ என்று மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் ப... மேலும் பார்க்க

பிரதமா், அவரின் தாயாா் தொடா்பான ஏஐ விடியோவை நீக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவு

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் மறைந்த தாயாரை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயா்... மேலும் பார்க்க

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியா... மேலும் பார்க்க

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மிதமாக உயா்ந்துள்ளது. இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க