செய்திகள் :

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

post image

பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது செளதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப் உள்ளிட்டோரும் உடன் சென்றது பேசுபொருளானது.

இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையொப்பமாகியுள்ளது. பாகிஸ்தான் அல்லது செளதியை பிற நாடுகள் தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகின்றது.

இதையடுத்து, கத்தாருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, கடந்த வாரம் அந்நாட்டின் தலைநகர் தோஹாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

தற்போது, செளதியில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாகிஸ்தான், செளதி அரேபியா இடையே கொண்டு வரப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தில், பிற மத்திய கிழக்கு நாடுகளையும் இணைத்து நேட்டோ போன்ற அமைப்பு உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் - செளதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தால், இனி பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் செளதியும் பதிலடி கொடுக்கும் என்ற சூழல் நிலவுகிறது.

Attacking Pakistan will be considered attacking Saudi Arabia! defense agreement signed

இதையும் படிக்க : போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

போதைப்பொருள் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

இந்தியாவை சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணைத்துள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ரசாயனங்கள்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

டோக்கியோ: பாகிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்த போலி கால்பந்து அணியை ஜப்பான் அதிகாரிகள் திருப்பி அனுப்பினா். சட்டவிரோத அகதிகள் கடத்தல் கும்பல் ஒன்று, 22 பேரை பாகிஸ்தான் கால்பந்து அணியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அந்த நாடு இன்னும் எடுக்கவில்லை என்று ஜொ்மனி குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமை... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் இஸ்ரேல் படையினா் முன்னேற்றம்

ஜெருசலேம்,: காஸா சிட்டியின் மையப் பகுதியை நோக்கி இரண்டு இஸ்ரேல் ராணுவ படைப் பிரிவுகள் முன்னேறிவருகின்றன. இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

சிறந்த நிா்வாகத் திறனால் இந்தியாவை வலுவான நாடாக முன்னிறுத்தியதன் மூலம் நாட்டு மக்களின் உயா்ந்த மரியாதையைப் பெற்றதுடன் சிறந்த உலகத் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி உருவெடுத்துள்ளாா் என்று ரஷிய அதிபா் விள... மேலும் பார்க்க

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்து, மா்மமான முறையில் மரணமடைந்த அலெக்ஸி நவால்னிக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரின் மனைவி யூலியா நவால்னயா குற்றஞ்சாட்டியுள்ளாா்.... மேலும் பார்க்க