செய்திகள் :

பிரதமர் மோடியின் தாயார் அவமதிப்பு! ஆர்ஜேடி மீது பாஜக குற்றச்சாட்டு

post image

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவமதிக்கப்பட்டதாகக் கூறி, ஒரு விடியோவை பாஜக வெளியிட்டது.

இருப்பினும், கட்சித் தொண்டர்களின் இந்த அவமதிப்பு நடவடிக்கையை கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரித்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியது.

இதுகுறித்து, பாஜக வெளியிட்ட பதிவில்,

``ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுக்கு ஒரு திட்டம் உள்ளது. அது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை துஷ்பிரயோகம் மற்றும் அவமதித்தல். இது தாய்மார்களின் உச்சபட்ச விரக்தியை தூண்டியுள்ளது.

ஆனால், ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிகார் ஒருபோதும் மறக்காது. பிகாரின் அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் இதற்கு பதிலளிப்பர்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாஜக வெளியிட்ட விடியோவை மறுத்த ஆர்ஜேடி,

``கட்சியின் எந்தவொரு தொண்டரோ வேறு யாரும் பிரதமரை அவதூறாகப் பேசவில்லை. பாஜக பகிர்ந்துள்ள விடியோவில், தேஜஸ்வி பேசுவதைக் கேட்க முடியவில்லை. இதன்மூலம், ஆர்ஜேடியின் மீது அவதூறு பரப்பும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக விடியோவை பாஜக சித்திரித்துள்ளனர்’’ என்று பதிலளித்துள்ளனர்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

BJP Slams RJD After PM Modi's Mother 'Abused' Again At Rally

மேகாலயாவில் லேசான நில அதிர்வு

வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன.அண்டை நாடான வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேகாலயாவ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகான் மாவட்டத்தில் உள்ள ரவாஸ்வாஹி கிராமத்தில் சனிக்கிழமை இரவு கபடி போட்டி ந... மேலும் பார்க்க

சாலைப் பள்ளங்களுக்காக பெங்களூருவை விட்டுச் செல்வதா? பிரபல நிறுவன சிஇஓ

பெங்களூருவில் உள்ள சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதால், அந்நகரில் இருந்து வெளியேறுவதாக பிரபல தளவாட தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருந்தது.ஊழியர்கள் சாலைப் பள்ளங்கள், போக்கு... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள்!

மத்தியப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது என்று அதிக... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று(செப். 21) மாலை 5 மணிக்கு உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்... மேலும் பார்க்க

ஹேக் செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் தளப் பக்கம்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் 'எக்ஸ்' தளப் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்த பிறகு ஹேக்கர்கள் அதில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி கொடிகளின் படங்களை பதிவிட்டுள்ளனர் என்று அதிகாரி ... மேலும் பார்க்க