செய்திகள் :

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

post image

சத்தீஸ்கரில் கபடி போட்டியின்போது மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், கொண்டகான் மாவட்டத்தில் உள்ள ரவாஸ்வாஹி கிராமத்தில் சனிக்கிழமை இரவு கபடி போட்டி நடைபெற்றது. அப்போது பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம் உயர் அழுத்த மின் கம்பியின் மீது உரசியுள்ளது.

இதில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பலியாகினர். மேலும் பலர் தீக்காயங்களுக்கு ஆளானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

உள்ளூர் கிராமவாசிகள் பாதிக்கப்பட்ட ஆறு பேரை விஷ்ராம்புரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

பொதுச் சொத்து சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்கு!

காயமடைந்த மூன்று பேரில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால், மேம்பட்ட மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். பலியானவர்கள் சதீஷ் நேதாம், ஷியாம்லால் நேதாம் மற்றும் சுனில் ஷோரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

A storm caused an 11-kV power line to touch the iron pole of the tent erected on the ground for viewers to watch the game, resulting in several of them receiving an electric shock.

மேகாலயாவில் லேசான நில அதிர்வு

வங்கதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேகாலயாவிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டன.அண்டை நாடான வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை ரிக்டர் அளவில் 4ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மேகாலயாவ... மேலும் பார்க்க

சாலைப் பள்ளங்களுக்காக பெங்களூருவை விட்டுச் செல்வதா? பிரபல நிறுவன சிஇஓ

பெங்களூருவில் உள்ள சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதால், அந்நகரில் இருந்து வெளியேறுவதாக பிரபல தளவாட தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருந்தது.ஊழியர்கள் சாலைப் பள்ளங்கள், போக்கு... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள்!

மத்தியப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது என்று அதிக... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று(செப். 21) மாலை 5 மணிக்கு உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் தாயார் அவமதிப்பு! ஆர்ஜேடி மீது பாஜக குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபெ... மேலும் பார்க்க

ஹேக் செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் தளப் பக்கம்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் 'எக்ஸ்' தளப் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்த பிறகு ஹேக்கர்கள் அதில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி கொடிகளின் படங்களை பதிவிட்டுள்ளனர் என்று அதிகாரி ... மேலும் பார்க்க