செய்திகள் :

திமுக - தவெக போட்டியை ஏற்க முடியாது: நயினார் நாகேந்திரன்

post image

திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்பதை ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளார்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,

``விஜய், இப்போதுதான் கட்சி தொடங்கியுள்ளார். கூட்டம் வருவதைப் பார்த்து, திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்றெல்லாம் சொல்லக் கூடாது.

தேர்தல் வரவேண்டும்; ஒழுங்கான வேட்பாளர்கள், பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்; மக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்பின்னர்தான், சொல்ல முடியுமே தவிர, ஜோசியம் சொல்ல முடியாது.

மக்களின் சைகைகளிலேயே தெரிந்து விடும் - எது வாக்காக மாறும் என்று. பெரிய தலைவர்கள் ஆரம்பித்த கட்சிகளெல்லாம், இப்போது எப்படி இருக்கிறது? என்பது உங்களுக்கே தெரியும்.

மத்திய அரசிடம் எவ்வளவு நிதி வாங்க வேண்டும்? மக்களுக்காக எவ்வளவு செலவுசெய்ய வேண்டும்? எத்தனை துறைகள் இருக்கிறது? என்பதெல்லாம் ஆட்சியில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகையால், திடீரென வந்து தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று கூறுவது எப்படி ஏற்க முடியும்?

நாங்கள் மிகப்பெரிய கட்சி. எங்களுடன் யாரையும் ஒப்பிட்டு பேசக் கூடாது. நாட்டு மக்கள் அக்கறை இருந்தால், ஆட்சி மாற்றத்துக்கு என்ன வழி? என்பதைத்தான் பார்க்க வேண்டும். திமுகவுக்கு எதிர்ப்பு என்பதை மட்டுமே சொல்லக் கூடாது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்

DMK - TVK clash can't be accepted: TN BJP Leader Nainar Nagenthran

தவெகவுக்கான மக்கள் ஆதரவு கண்டு பிறருக்கு அச்சம்: விஜய்

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன் என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டையே முக்காடு போட வைப்பார்: இபிஎஸ் மீது பொன்முடி விமர்சனம்

அதிமுக 5 கட்சிகளாகப் பிரிந்து போயிருப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ``தமிழ்நாட்டைத் தலைகுனிய வைப்பத... மேலும் பார்க்க

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 வேலைவாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சங... மேலும் பார்க்க

மகாளய அமாவாசை: பேரூர் படித்துறையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

மகாளய அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது, மறைந்த முன்னோர... மேலும் பார்க்க

போலீஸும் ரெளடியும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! தலைமைக் காவலர் கைது!

கரூரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தலைமைக் காவலரை, போலீஸார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரெளடியை தேடி வருகின்றனர். கரூர் தொழிற்ப... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த்... மேலும் பார்க்க