செய்திகள் :

கன்னியாகுமரி: மது போதையில் வந்த மகனை திட்டிய மருமகள்; தாக்கி காதை கடித்த மாமியார்... போலீஸ் விசாரணை!

post image

கன்னியாகுமரி மாவட்டம், வீயன்னூர் சாய்கோடு பகுதியை சேர்ந்த தங்கமணியின் மனைவி அல்போன்சாள் (55). தங்கமணி இறந்து விட்டார். அல்போன்சாள் தனியார் பள்ளிக்கூடத்தில் உதவியாளராக வேலை செய்துவருகிறார். இவரது மகன்  பிரின்ஸ் (38) டெம்போ டிரைவராக வேலைசெய்துவருகிறார். பிரின்சின்  மனைவி மஞ்சு (35) வெள்ளிகோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றுகிறார். பிரின்ஸுக்கும் மஞ்சுவுக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரின்ஸ், அவரது மனைவி, மகள்கள், தாய் அல்போன்சாள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். பிரின்ஸ் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று மனைவி மஞ்சுவிடம் தகராறு செய்துவந்துள்ளார். பிரின்ஸ் மதுபோதையில் தகராறு செய்யும்போது  மஞ்சு திட்டுவது வழக்கமாம். அதே சமயம், தனது மகனை மஞ்சு திட்டும்போதெல்லாம் மகனுக்கு ஆதரவாக செயல்படுவாராம் தாய் அல்போன்சாள். எனவே மகனை திட்டும் மருமகள் மஞ்சுவை அல்போன்சாள் திட்டுவாராம். 'எனது மகனை பற்றி தவறாக பேசாதே' என மருமகளிடம் மாமியார் சண்டை போடுவாராம்.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் மஞ்சு

இந்நிலையில் நேற்று முன் தினம்இரவு மது போதையில் பிரின்ஸ் வீட்டு கதவை தட்டியுள்ளார். பிரின்ஸை அவரது மனைவி மஞ்சுவும், மகள்களும் வாசலை திறந்து வீட்டுக்குள் அழைத்தனர். பிரின்ஸ் வாசலை பிடித்தபடி தள்ளாடிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து பிரின்ஸை இழுத்து வீட்டுக்கு கொண்டு வர முயற்சித்துள்ளார் மஞ்சு. அப்போது கணவனை மஞ்சு திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அல்போன்சாள் தகாத வார்த்தைகளால் மஞ்சுவை திட்டியதுடன், அவரை காலால் மிதித்து கீழே தள்ளியுள்ளார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அல்போன்சாள், அப்பகுதியில் கிடந்த கல்லை எடுத்து மஞ்சுவின் தலையில் தாக்கியுள்ளார். மேலும், மஞ்சுவின் வலது காதை மாமியார் அல்போன்ஸாள் கடித்திருக்கிறார்.

மாமியார் காதை கடித்ததாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் மஞ்சு

மஞ்சுவின் தலையிலும் காதிலும் ரத்தம் சொட்டியதால் அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதுடன், மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து  மஞ்சு  திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். திருவட்டார் போலீஸார் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்: முன் விரோதம் காரணமாக இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு... அதிர்ச்சி வீடியோ!

சேலம், திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜீவானந்தம் இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வேடுகத்தாம்பட்டி... மேலும் பார்க்க

திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம் போட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியைச் சேர்ந்தவர் பக்தி மாயகர் (26). இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது தோழியை பார்க்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கிய கூடலூர் இளைஞர்கள்

கஞ்சா மிட்டாய் கடத்தல்நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. தேசிய அளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்தச... மேலும் பார்க்க

அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர விசாரணையில் காவல்துறை!

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற 71 வயது பெண் இந்தியாவுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த நிலையில், எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் அமெரி... மேலும் பார்க்க

விருதுநகர்: ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கு; 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டாஸ்மாக் முன்னாள் ஊழியர் கைது!

விருதுநகர், காந்திபுரம் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 1998 ஜனவரி 22-ஆம் தேதி ரூ.150 லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மதுபானக் கிடங்கு உதவியாளர் பிரேம்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார... மேலும் பார்க்க

நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ

நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல... மேலும் பார்க்க