செய்திகள் :

ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!

post image

ஆப்பிரிக்க நாடுகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கியது முதல் 1,90,000-க்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்காவில், சுமார் 29 நாடுகளில் குரங்கு அம்மையின் பரவல் உள்ளது உறுதியாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் 1,91,559 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இத்துடன், சுமார் 1,999 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர்.

இருப்பினும், கடந்த மே மாதம் பதிவான பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில், தற்போது குரங்கு அம்மையின் பரவல் 70 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 1,620 பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், சென்ற வாரம் 491 பாதிப்புகள் மட்டுமே உறுதியாகியுள்ளன.

முன்னதாக, குரங்கு அம்மை தொற்றானது, குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி. நோயாளிகளையே அதிகம் பாதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் உள்நாட்டுப் போர்களினாலும், ஆட்சியாளர்களின் ஊழலினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்நாடுகளில் மக்களுக்குத் தேவையான சுகாதாரம், மருத்துவம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பது அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை பரவலுக்கான அவசரநிலை நீக்கப்படுவதாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், இந்த அவசரநிலை நீக்கப்படுவது, தொற்று பரவல் முடிவடைந்துவிட்டது என அர்த்தம் இல்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

More than 190,000 cases of mpox have been reported in African countries since the outbreak began in 2024.

சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

சீன அதிபர் ஸி ஜிங்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக, சீனாவின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அ... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல... மேலும் பார்க்க

ஆப்கனில் பிரிட்டன் தம்பதி விடுதலை! மாதங்கள் கழித்து மனம் மாறிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில், சொல்லப்படாத குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆ... மேலும் பார்க்க

உலகம் கவனிக்கிறது: பாகிஸ்தான் - பயங்கரவாதிகள் உறவு குறித்து இந்தியா!

ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்த பாதிப்புகள் குறித்தும், தங்களுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகள் மாறி மாறி உண்மையைக் கொட்டி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஒரே நாளில் நடைபெற்ற 2 வெவ்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், நேற்ற... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை அல்ல! - முன்னாள் பிரதமர் மறுப்பு!

நேபாளத்தின் ஜென் - ஸி போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு கொடுக்கவில்லை எனப் பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார். நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடைகள் ... மேலும் பார்க்க