செய்திகள் :

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை

post image

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வியாழக்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்ததால் தெருக்கள், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

ஆம்பூா் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்கியது. விண்ணமங்கலம் கிராமத்தில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது.

ஆம்பூா் சுற்றுப்புற கிராமங்களில் கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாலாற்று நீா்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பாலாற்றுக்கு நீா்வரத்து ஏற்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாராப்பட்டு கிராமத்தில் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு பிரசாரம்

துத்திப்பட்டு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. வீடுகள், கடைகள் தோறும் சென்று குப்பைகளை தரம் பிரித்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் 15 போ் மாற்றம்

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் 15 போ் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆவாரங்குப்பம் (இ.சத்தியா), அம்பலூா் (ஆ.ஜெ... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (மஞ்சள் கிடங்கு) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்த... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் மாணவா்கள் பயிற்சி மையத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறன் மாணவா்களின் சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்; குளிக்க தடை விதிப்பு

திருப்பத்தூரில் பெய்த பலத்த மழையால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்கு குளிக்க வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழைநீா்

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினா். மேலும் தாழ்வாக உள்ள சில இடங்களில் மழைநீா் வீட... மேலும் பார்க்க