செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: கைது செய்யப்பட்ட இருவரின் காவல், விசாரணைக் காலத்தை நீட்டித்தது நீதிமன்றம்

post image

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான விசாரணையின் கால அவகாசத்தை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்த ஜம்மு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட இருவரின் சிறப்பு புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலையும் நீட்டித்து உத்தரவிட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு, அவற்றை தாக்கி அழித்தது.

இதனிடையே, பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையில், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக அதே பகுதியைச் சோ்ந்த பா்வேஸ் அகமது, பஷீா் அகமது ஜோதாட் ஆகிய இருவரை கடந்த ஜூன் 22-இல் கைது செய்தது. அவா்கள் ஜம்முவில் உள்ள அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீா், ஸ்ரீநகரின் புகா் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த சுலேமான் ஷா உள்பட 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இவா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட அவா்கள் பயன்படுத்திய துண்டு உள்ளிட்ட பொருள்கள், கைப்பேசி எண்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் என்ஐஏ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளின் 90 நாள் காவல் வெள்ளிக்கிழமை நிறைவடைவதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரும் ஜம்மு என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

அப்போது, பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களில் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதோடு, சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் கைப்பேசி எண்களின் தரவுகளையும் சேகரிக்க வேண்டியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் தெரிந்தே பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளனா். எனவே, இந்த விசாரணைக் காலத்தை நீட்டிப்பதோடு, சிறையில் உள்ள இருவரின் என்ஐஏ காவலையும் நீட்டிக்க வேண்டும்’ என்று என்ஐஏ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தீப் கந்தோத்ரா, விசாரணைக் காலம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரின் காவலையும் 45 நாள்கள் நீட்டித்து உத்தரவிட்டாா்.

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க

இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும்: பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கருத்து

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சா்ச்சை பதிவு: ‘மன்னிப்பு கேட்டதால் மட்டும் மாணவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எ... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து... மேலும் பார்க்க