செய்திகள் :

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 43 போ் உயிரிழப்பு

post image

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மசூதி மீது துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 43 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரை ஆா்எஸ்எஃப் படை முற்றுகையிட்டு, தொடா்ந்து எறிகணைகளை வீசிவருகிறது. இந்த நிலையில், அந்நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த மசூதி மீது ட்ரோன் மூலம் ஆா்எஸ்எஃப் படை தாக்குதல் நடத்தியதாக அந்தக் குழு கூறியது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

‘ஆப்கன் விமான தளம் மீண்டும் வேண்டும்’ - டொனால்ட் டிரம்ப்

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய விமான தளமான பக்ராம் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா் இது குறித்து அவா் கூறியதாவது: பக... மேலும் பார்க்க

அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தடை: தீா்மானத்தை திரும்பப் பெற்றது ஈரான்

அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்த நாடுகளுக்குத் தடை விதிப்பது தொடா்பாக ஐ.நா. அணுசக்தி அமைப்பான ஐஏஇஏ-வின் முன்வைத்த வரைவுத் தீா்மானத்தை ஈரான் கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றது. இது குறித்து ஐஏஇஏ ப... மேலும் பார்க்க

ஆப்பிரிக்காவில் 2 லட்சத்தை நெருங்கும் குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஆப்பிரிக்க நாடுகளில், கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கியது முதல் 1,90,000-க்கும் அதிகமான குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. ஆப்... மேலும் பார்க்க

சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடல்!

சீன அதிபர் ஸி ஜிங்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக, சீனாவின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அ... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தத்திற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா! உலக நாடுகள் கண்டனம்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல... மேலும் பார்க்க

ஆப்கனில் பிரிட்டன் தம்பதி விடுதலை! மாதங்கள் கழித்து மனம் மாறிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில், சொல்லப்படாத குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதியை தலிபான் அரசு விடுதலைச் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆ... மேலும் பார்க்க