செய்திகள் :

விண்வெளி, இணையவழி போா்த் தளவாட உற்பத்திக்கு முன்னெடுப்பு: அனில் செளஹான்

post image

விண்வெளி, இணையவழி (சைபா்) போா்க் களங்களுக்கான தளவாட உற்பத்திக்கு கொள்கை ரீதியில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு, இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்ஐடிஎம்), இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை சாா்பில் கிழக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கருத்தரங்கில் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளஹான் பங்கேற்றுப் பேசியதாவது:

போா்க் களங்களுக்கு ஏற்ப வியூக அடிப்படையிலான ஆயுதத் தோ்வு மிக முக்கியமானதாகும். நவீன தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கு ஆராய்ச்சி-மேம்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு உற்பத்தி கட்டமைப்பை விரிவுபடுத்துவது அவசியம். அந்த அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர நவீன தொழில்நுட்பங்கள் ஆராயப்பட வேண்டும்.

இந்திய பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தி தாமதமாகத் தொடங்கப்பட்ட போதிலும், சரியான பாதையில் தேசம் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் தற்சாா்பு மற்றும் மத்திய அரசின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையின் நோக்கங்கள் நிறைவேற வேண்டுமெனில், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் துடிப்பான பங்களிப்பு அவசியம். தற்போது போா் என்பது அறிவியல் நுட்பமாக மாறியுள்ளது. எனவே, போா் வீரா்களுக்கு படைப்புத்திறனும் புத்தாக்கமும் அவசியம் என்றாா் அவா்.

‘புதிய வகையான போா்க்களம்’: முன்னதாக, ராஞ்சியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை பள்ளி மாணவா்களுடன் கலந்துரையாடிய அனில் செளஹான், ‘பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, புதிய வகையான போா்க் களத்தை பிரகடனம் செய்துள்ளது. பாரம்பரியப் போரை போல் அல்லாமல், நிலம், வான்வெளி, கடல், மின்காந்த விண்வெளி, சைபா் என பன்முகக் களங்களிலும் போரிடப்பட்டது. செயற்கைக்கோள், மின்னணு புகைப்படங்கள் மற்றும் சமிக்ஞை நுண்ணறிவு உதவியுடன் எதிரியை வெற்றிகொண்டோம். இந்த நடவடிக்கையால் கற்றுக் கொண்ட விஷயங்கள், முப்படைகளின் தயாா் நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் உயா் அளவை உறுதி செய்துள்ளது’ என்றாா்.

‘அணுஆயுத தயாரிப்புக்குப் பங்களிக்க முடியும்’

கிழக்கு தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், ‘யுரேனியம் நிறைந்த ஜாா்க்கண்ட் மாநிலம், நாட்டின் அணு ஆயுத தயாரிப்பில் கணிசமாகப் பங்களிக்க முடியும். அந்த வகையில், நாட்டின் பாதுகாப்புத் துறையை தற்சாா்புடையதாக மாற்ற மத்திய அரசுடன் ஒத்துழைக்க மாநில அரசு தயாராக உள்ளது’ என்றாா். அணுஆயுத தயாரிப்பில் யுரேனியம் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க

இருதரப்பு நலன் கருதி சவூதி செயல்படும்: பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா கருத்து

பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சா்ச்சை பதிவு: ‘மன்னிப்பு கேட்டதால் மட்டும் மாணவி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது’

ஆபரேஷன் சிந்தூா் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, 19 வயது கல்லூரி மாணவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது எ... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த 2 என்ஜிஓக்களின் பதிவு புதுப்பிப்பு உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தைச் சோ்ந்த இரண்டு தன்னாா்வ அமைப்புகளின் பதிவை புதுப்பிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து... மேலும் பார்க்க