செய்திகள் :

நேபாள வன்முறை: துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை அல்ல! - முன்னாள் பிரதமர் மறுப்பு!

post image

நேபாளத்தின் ஜென் - ஸி போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு கொடுக்கவில்லை எனப் பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி தெரிவித்துள்ளார்.

நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடைகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து, ஜென் - ஸி என்றழைக்கப்படும் இளம்தலைமுறையினர் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

கடந்த செப்.8 ஆம் தேதி, போராட்டத்தின் முதல் நாளின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 19 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போராட்டம் வன்முறையாக வெடித்ததால், அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனால், நேபாள அரசு கவிழ்க்கப்பட்டு, கடந்த செப்.12 ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து, ராணுவத்தின் பாதுகாப்பில் அவர்களது முகாம்களில் தங்கியிருந்த முன்னாள் பிரதமர் சர்மா ஓலி அங்கிருந்து நேற்று (செப்.18) வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், நேபாளத்தின் 10 ஆவது அரசியலமைப்பு நாளை முன்னிட்டு இன்று சர்மா ஓலி தனது முகப்புத்தகப் பக்கத்தில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவு வழங்கவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்:

“போராட்டக்காரர்கள் மீது சுடப்பட்ட தோட்டாக்கள் ஆட்டோமேடிக் துப்பாக்கிகளில் இருந்து வந்தவை. காவல் துறையினரிடம் அத்தகைய துப்பாக்கிகள் கிடையாது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அமைதியான போராட்டத்தில் ஊடுருவிய சதிகாரர்கள் வன்முறையாக அதை மாற்றினார்கள். இதனால்தான், நமது இளைஞர்கள் கொல்லப்பட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேபாள வன்முறையில் 3 காவல் துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 72 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை!

Former Prime Minister K.P. Sharma Oli has said that the government did not give the order to open fire during the Gen-Zi protests in Nepal.

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 11 பேர் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஒரே நாளில் நடைபெற்ற 2 வெவ்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், நேற்ற... மேலும் பார்க்க

ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை!

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி அமைத... மேலும் பார்க்க

காஸா சிட்டியில் இருந்து 2.5 லட்சம் போ் வெளியேற்றம்

கடந்த ஒரு மாதத்தில் காஸா சிட்டியில் இருந்து அண்மையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. அதிகாரிகள் கூறியதாவது: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவர... மேலும் பார்க்க

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 70% குறைக்க ஆஸ்திரேலியா முடிவு

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 62 முதல் 70 சதவீதம் வரை குறைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் ஆன்டனி அல்பனேசி வியாழக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

சாபஹாா் துறைமுகத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை: இந்தியாவுக்கு பாதிப்பு

ஈரானில் உள்ள சாபஹாா் துறைமுகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார தடை விலக்கை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது. ஈரான், ஆப்கானிஸ்தான், ஆா்மெனியா, அஜா்பைஜான், ரஷியா, மத்திய ஆசியா, ஐ... மேலும் பார்க்க

தைவானைக் கைப்பற்றுவோம்: சீனா மீண்டும் எச்சரிக்கை

தைவானைக் கைப்பற்றப் போவதாக சீனா மீண்டும் வியாழக்கிழமை எச்சரித்துள்ளது. இது குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச ராணுவ அதிகாரிகளிடையே அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜன... மேலும் பார்க்க