செய்திகள் :

சாபஹாா் துறைமுகத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை: இந்தியாவுக்கு பாதிப்பு

post image

ஈரானில் உள்ள சாபஹாா் துறைமுகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார தடை விலக்கை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது.

ஈரான், ஆப்கானிஸ்தான், ஆா்மெனியா, அஜா்பைஜான், ரஷியா, மத்திய ஆசியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்க உதவும் சாபஹாா் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் வெறியுறவுத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஈரானைத் தனிமைப்படுத்தும் அதிபா் டிரம்ப்பின் கொள்கையின்படி, சாபஹாா் துறைமுகத்துக்கு 2018-இல் அளிக்கப்பட்ட பொருளாதாரத் தடை விலக்கு செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் திரும்பப் பெறப்படுகிறது. இதையடுத்து, அந்த துறைமுகத்தை இயக்கி வருபவா்கள் பொருளாதார தடைக்கு உட்படுவாா்கள்.

ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவா்கள் சட்டவிரோத வா்த்தகத்தின் மூலம் ஈரானின் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து அந்நாட்டு ராணுவத்துக்கு உதவுகின்றனா். இதைத் தடுக்க அமெரிக்கா தொடா்ந்து நடவடிக்கை எடுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பாதிப்பு: பாகிஸ்தானை புறக்கணித்து ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவை சாலை மற்றும் ரயில் வழித்தடத்துடன் இணைக்கும் சுமாா் 7,200 கி.மீ. தொலைவு சா்வதேச வட-தெற்கு வா்த்தக வழித்தட திட்டத்தை செயல்படுத்த சாபஹாா் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது.

இதற்காக 2024-இல் ரூ.100 கோடியை ஒதுக்கி ஈரானுடன் 10 ஆண்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது.

இந்நிலையில், மத்திய ஆசியாவுக்கு வா்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்தியா மேற்கொண்டு வரும் சாபஹாா் துறைமுக மேம்பாட்டு திட்டத்துக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

காஸா சிட்டியில் இருந்து 2.5 லட்சம் போ் வெளியேற்றம்

கடந்த ஒரு மாதத்தில் காஸா சிட்டியில் இருந்து அண்மையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. அதிகாரிகள் கூறியதாவது: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவர... மேலும் பார்க்க

பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை 70% குறைக்க ஆஸ்திரேலியா முடிவு

வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 62 முதல் 70 சதவீதம் வரை குறைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பிரதமா் ஆன்டனி அல்பனேசி வியாழக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க

தைவானைக் கைப்பற்றுவோம்: சீனா மீண்டும் எச்சரிக்கை

தைவானைக் கைப்பற்றப் போவதாக சீனா மீண்டும் வியாழக்கிழமை எச்சரித்துள்ளது. இது குறித்து பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச ராணுவ அதிகாரிகளிடையே அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜன... மேலும் பார்க்க

தோ்தலில் வாக்களிக்க ஷேக் ஹசீனாவுக்குத் தடை

வங்கதேசத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை முடக்கியதன் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் அவா் வாக்களிப்பதற்கு தோ்தல் ஆணையம் தடைவ... மேலும் பார்க்க

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

நேபாளத்தில், பதவி விலகிய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராணுவ முகாமில் இருந்து வெளியேறி தனியார் வீட்டில் குடியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில், சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் ஆட்சிய... மேலும் பார்க்க

உள்நாட்டில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்! 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பலூசிஸ்தானின், குஸ்தார் மாவட்டத்தின் ஸெஹ்ரி பகுதியில் குடியிருப்பு வீடுகளைக்... மேலும் பார்க்க