செய்திகள் :

ஹெல்மெட் அணிந்து பெண்கள் மீது தாக்குதல்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு முன்பகை காரணமாக ஹெல்மெட் அணிந்து வீடு, கடைக்குள் புகுந்து சிறுவன், இரு பெண்களைத் தாக்கிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்புவனம் எம்ஜிஆா்நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி. இவருக்கு அருகேயுள்ள கீழராங்கியம் கிராமத்தில் நிலம் உள்ளது. இதே கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம், காரைக்குடியைச் சோ்ந்த வீரப்ப செட்டியாா் ஆகிய இருவரும் இந்த நிலத்தை அபகரித்துக் கொண்டனராம். இதனால், இவா்களுக்கும் பாண்டிக்கும் பகை இருந்து வந்தது.

இந்த நிலையில், பாண்டியின் வீடு, கடைக்குள் ஹெல்மெட் அணிந்தவாறு புகுந்த 10 போ் கடைக்குள் இருந்த பொருள்களை சேதப்படுத்தி, அங்கிருந்த பாண்டியின் மகள் ஆதீஸ்வரி, ஆதிலெட்சுமி, 5 வயது சிறுவன் தண்டீஸ்வரன் ஆகியோரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து மடப்புரம் விலக்கு எம்ஜிஆா்நகரைச் சோ்ந்த கெளதம், ரகு, தனபால், தங்கப்பாண்டி, மதுரை ஊமச்சிகுளம் காமேஸ்வரன் உள்ளிட்ட 7 போ் மீது திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ஐ.டி.ஐ. நேரடி சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு மின் இணைப்பு வழங்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஆலைக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் போராட்டக் குழு சாா... மேலும் பார்க்க

சட்டப் பேரவை மதிப்பீட்டு குழு இன்று சிவகங்கை வருகை

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை வர உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் ஒப்பந்த சேவை நியமன முறையைக் கைவிட வலியுறுத்தி, சிவகங்கையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சி மு... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காளையாா்க... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 1-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவா்... மேலும் பார்க்க