செய்திகள் :

மூன்று நாள் உயர்வுக்கு பிறகு, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

post image

மும்பை: ப்ளூ-சிப் நிறுவனங்களான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப முன்பதிவை செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் இன்று 387 புள்ளிகள் சரிந்து, அதன் மூன்று நாள் தொடர் ஒட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 528.04 புள்ளிகள் சரிந்து 82,485.92 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 387.73 புள்ளிகள் சரிந்து 82,626.23 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 96.55 புள்ளிகள் சரிந்து 25,327.05 ஆக நிலைபெற்றது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சமமாக முடிந்த நிலையில், இந்த வாரம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா ஒரு சதவிகிதம் வரை உயர்ந்தன.

நுகர்வோர் சாதனங்கள், ஊடகம், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி பங்குகள் 0.4 முதல் 0.6% சரிந்தது. அதே வேளையில் மின்சாரம், பொதுத்துறை வங்கி ஆகியவை தலா 1% உயர்ந்தன.

சென்செக்ஸில் எச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், டிரென்ட், கோடக் மஹிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை பங்குகள் சரிந்த நிலையில் அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், எஸ்பிஐ, என்டிபிசி மற்றும் சன் பார்மா ஆகியவை உயர்ந்து முடிவடைந்ததது.

நிஃப்டி-யில் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே, டைட்டன், டிரென்ட் ஆகிய பங்குகள் உயர்ந்தும் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எஸ்பிஐ ஆகியவை சரிவுடன் முடிந்தன.

அமெரிக்க குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் செய்த பங்கு மோசடி குற்றச்சாட்டுகளில் கௌதம் அதானி மற்றும் அவரது குழுவினரை, சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' விடுவித்ததை அடுத்து அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட அனைத்து அதானி குழும பங்குகளும் 13 சதவிகிதம் வரை உயர்ந்தன.

நிபுனர் குழுவானது, நிறுவனங்களுக்கு இடையிலான நிதி பரிமாற்றம் குறித்த எந்த ஒழுங்குமுறையையும் மீறவில்லை என்று செபி விசாரணையில் கண்டறியப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

ஆர்டர்கள் பெற்றதையடுத்து ராஜேஷ் பவர் சர்வீசஸ் பங்குகள் 3% அதிகரித்தன. தலைமை நிர்வாக அதிகாரி வெளியேறியதால் கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிந்தன.

அல்ட்ராடெக் ஆர்டர் பெற்றதையடுத்து டெக்ஸ்மாக்கோ ரயில் பங்குகள் உயர்ந்தன. சந்தை ஒழுங்குமுறை ஆணையான செபி அதானி குழுமத்தை விடுவித்ததையடுத்து அதன் பங்குகள் உயர்ந்தன.

ஏஜிஆர் சர்ச்சையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்ததைத் தொடர்ந்து வோடபோன் ஐடியாவின் பங்குகள் 8% உயர்ந்தன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் பங்குகளை கையகப்படுத்தியதை அடுத்து கிராஃபைட் இந்தியா பங்குகள் 1% உயர்ந்தன.

அதானி பவர், குஜராத் மினரல், லாரஸ் லேப்ஸ், அசோக் லேலேண்ட், ராடிகோ கைதான், ஐஷர் மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார், மாருதி சுசுகி, எடர்னல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தது.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்ந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.55 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.07 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.366.69 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க-இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அந்நிய செலவாணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11 ... மேலும் பார்க்க

வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு

புது தில்லி: முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் எப்போதும் கூறி வந்ததை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி குழும தலைவர் கௌதம் அதானி தெரிவி... மேலும் பார்க்க

செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு தவறானவை என்று செபி அறிவித்திருக்கும் நிலையில், அதானி குழுமத்தின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன் அதானி குழுமத... மேலும் பார்க்க

எரிசக்தி மையங்களில் குறைந்த கரியமில வாயு வெளியேற்றம்

இந்திய எரிசக்தி மையங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவு முந்தைய 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியோடு ஒப்பிடுகையில் நடப்பு 2025-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து பிரிட்டன... மேலும் பார்க்க

விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாகனங்களின் விலைகளை 1.29 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

சிம் விற்பனை, மொபைல் ரீசாா்ஜ் அஞ்சல் துறையுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க