செய்திகள் :

”என் உணவகத்தில் ரூ.50 தான் வியாபாரம் ஆனது” - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் புலம்பிய கங்கனா!

post image

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், தனது உணவகத்தில் ரூ.50 மட்டுமே வியாபாரம் ஆகுவதாக தனது சொந்த நஷ்டத்தைப் பற்றி மக்களிடம் புலம்பியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதி எம்.பி.யான கங்கனா ரனாவத், தனது தொகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

அப்போது மக்களிடம் பேசிய அவர், "எனது வலியையும் புரிந்து கொள்ளுங்கள். எனது உணவகத்தில் நேற்று ரூ.50 மட்டுமே வியாபாரம் ஆனது. ஆனால், நான் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும்.

நானும் ஒரு இமாச்சலப் பெண் தான்" என்று பேசியிருக்கிறார். கங்கனா இந்த ஆண்டு தொடக்கத்தில் மணாலியில் "தி மவுண்டன் ஸ்டோரி" (The Mountain Story) என்ற பெயரில் உணவகத்தைத் தொடங்கினார்.

சுற்றுலாப் பயணிகளை பெரிதும் நம்பியிருக்கும் இப்பகுதியில், மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக அவரது உணவகத்தின் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கங்கனாவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் போது, ஒரு எம்.பி.யாக தனது சொந்த தொழில் நஷ்டம் குறித்துப் பேசுவது பொறுப்பற்ற செயல் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

தவெக விஜய்: "35 நிமிடங்களே பரப்புரை, பொது சொத்து சேதமடைந்தால்..." - காவல்துறை விதித்த நிபந்தனைகள்!

தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நாளை (செப் 20) சனிக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்,இந்த பிரசாரத்துக்... மேலும் பார்க்க

`வகுப்பறை முக்கியத்துவத்தை கழிப்பறைக்கும் தர வேண்டும்’ - சிரமப்படும் காரப்பட்டு அரசுப்பள்ளி மாணவிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர் பிரதான சாலையோரமாக அமைந்திருக்கிறது `காரப்பட்டு’ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில், ஊமையனூர், வண்ணாம்பள்ளி, சந்தகொட்டாவூர், ... மேலும் பார்க்க

அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோரின் கோரிக்கை என்ன?

தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (29). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது... மேலும் பார்க்க

``அமெரிக்காவின் கூடுதல் வரி வேலைக்கு ஆகாது'' - இந்தியா, சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா

உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. அப்படி எண்ணெய் வாங்கும் இந்தியா, பிரேசில் மீது ஏற்கெனவே கூடுதல் வரியாக 25 சதவிகிதத்தை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால்,... மேலும் பார்க்க

வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் - காவல்துறை கடும் எச்சரிக்கை!

கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தில், புற்றீசல்போல போலி மருத்துவர்களும் உருவாகிவருகின்றனர். `நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம்’ என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்பு... மேலும் பார்க்க

``பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜக தான்'' - முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி

நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வர... மேலும் பார்க்க