செய்திகள் :

``அமெரிக்காவின் கூடுதல் வரி வேலைக்கு ஆகாது'' - இந்தியா, சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா

post image

உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. அப்படி எண்ணெய் வாங்கும் இந்தியா, பிரேசில் மீது ஏற்கெனவே கூடுதல் வரியாக 25 சதவிகிதத்தை விதித்துள்ளது அமெரிக்கா.

இதனால், இந்த இரு நாடுகளுக்கும் அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவிகிதம் ஆகும். இப்போதைக்கு இந்த வரிக்கு சீனா மட்டும் விதிவிலக்காக உள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் இந்தியா, சீனாவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

Sergei Lavrov | செர்ஜி லாவ்ரோவ்
செர்ஜி லாவ்ரோவ்

செர்ஜி லாவ்ரோவ் பேசியது என்ன?

செர்ஜி லாவ்ரோவ்,

"இந்தியா மற்றும் சீனா உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்கள். அவர்களிடம், 'எனக்குப் பிடிக்காததைச் செய்வதை நிறுத்துங்கள், இல்லையேல் உங்கள் மீது வரி விதிப்பேன் என்று கூறுவது' வேலைக்கு ஆகாது.

தற்போது பீஜிங் மற்றும் வாஷிங்டன், புது டெல்லி மற்றும் வாஷிங்டன்னிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் தற்போதைய பேச்சுவார்த்தை, அமெரிக்கா இதை புரிந்துகொண்டது என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்கா வணிக அச்சுறுத்தல்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளைப் புதிய சந்தைகள், புதிய சப்ளைகளை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும், இது அந்த நாடுகளுக்குக் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது" என்று பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோரின் கோரிக்கை என்ன?

தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (29). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது... மேலும் பார்க்க

வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் - காவல்துறை கடும் எச்சரிக்கை!

கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தில், புற்றீசல்போல போலி மருத்துவர்களும் உருவாகிவருகின்றனர். `நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம்’ என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்பு... மேலும் பார்க்க

``பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜக தான்'' - முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி

நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வர... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக சௌதி அரேபியா போரில் இறங்குமா? - பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் எப்படி செயல்படும்?

சௌதி அரேபியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ள Strategic Mutual Defense Agreement-இன் படி, இருநாடுகளும் பாதுகாப்பு விவகாரங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பை வழங்கும்.அதாவது ஏதேனும் ஒரு நாட்டை வேறொரு நா... மேலும் பார்க்க

STALIN-க்கு நன்றி சொல்லும் Amit shah? EPS-ன் CM கனவுக்கு செக்?! | Elangovan Explains

சமீபத்தில் 'அமித் ஷா - எடப்பாடி' சந்திப்பு, டெல்லியில் நிகழ்ந்தது. அங்கு, 'பிரிந்தவர்களை சேர்க்கக்கூடாது' என சில நிபந்தனைகளை எடப்பாடி விதித்தார். 'அப்படியென்றால், NDA கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் ... மேலும் பார்க்க