செய்திகள் :

அமெரிக்கா: காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்: இனவெறி காரணமா? - பெற்றோரின் கோரிக்கை என்ன?

post image

தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நிஜாமுதீன் (29). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார்.

இந்த நிலையில், அவரை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அமெரிக்க காவல்துறை அளித்திருக்கும் தகவலில்,``கடந்த 3-ம் தேதி சண்டா கிளாரா பகுதியிலிருந்து எங்களுகு கத்திக் குத்து சம்பவம் நடந்திருப்பதாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்றோம். அங்கு நிஜாமுதீன் கையில் கத்தியுடன், தன் அறைத் தோழரைத் தாக்கிவிட்டு நின்றிருந்தார். அவரை கத்தியைக் கீழே போட்டு சரணடையக் கூறினோம்.

அமெரிக்கா
அமெரிக்கா

ஆனால், அவர் எங்களையே தாக்க வந்தார். அதனால், துப்பாக்கிச்சூடு நடத்தினோம். அதில் படுகாயமடைந்தார், அதே நேரத்தில் காயமடைந்த அவரது அறைத் தோழன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சம்பவ இடத்திலிருந்து இரண்டு கத்திகள் மீட்கப்பட்டன" எனத் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், கொல்லப்பட்ட நிஜாமுதீனின் லிங்க்ட் இன் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. அந்தப் பதிவில், ``EPAM Systems வழியாக Google-லில் பணிபுரிந்ததேன்.

அங்குதான் ஏற்றுக்கொள்ளவே முடியாதளவு இன வேறுபாடு, விரோதம், பழிவாங்குதல் என மோசமான துன்புறுத்தலை எதிர்கொண்டேன்.

அதோடு, நிறுவனமும் என்னிடம் சம்பள மோசடிச் செய்தது. எனக்கு நியாயமான ஊதியம் வழங்கவில்லை. இனவெறி நபர் மற்றும் குழுவின் உதவியுடன் அவர்கள் தங்கள் துன்புறுத்தல், பாகுபாடு, அச்சுறுத்தும் நடத்தையைத் தொடர்ந்தனர்.

சமீபத்தில், நிலைமை மோசமாகிவிட்டது. எனது உணவு விஷமாக மாற்றப்பட்டது. இப்போது அநீதிக்கு எதிராகப் போராடியதற்காக எனது தற்போதைய குடியிருப்பிலிருந்தும் வெளியேற்றப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காவல்துறை
காவல்துறை

நிஜாமுதீன் அமெரிக்க குடிமக்களான இரண்டு அறை தோழர்களுடன் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நிஜாமுதீனின் பதிவைத் தொடர்ந்து, நிஜாமுதீனின் குடும்பத்தினர், அமெரிக்காவில் நிஜாமுதீன் இன பாகுபாட்டை எதிர்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், நிஜாமுதீனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

”என் உணவகத்தில் ரூ.50 தான் வியாபாரம் ஆனது” - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் புலம்பிய கங்கனா!

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத், தனது உணவகத்தில் ரூ.50 மட்டுமே வியாபாரம் ஆகுவதாக தனது சொந்த நஷ்டத்தைப் பற்றி மக்க... மேலும் பார்க்க

`வகுப்பறை முக்கியத்துவத்தை கழிப்பறைக்கும் தர வேண்டும்’ - சிரமப்படும் காரப்பட்டு அரசுப்பள்ளி மாணவிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர் பிரதான சாலையோரமாக அமைந்திருக்கிறது `காரப்பட்டு’ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில், ஊமையனூர், வண்ணாம்பள்ளி, சந்தகொட்டாவூர், ... மேலும் பார்க்க

``அமெரிக்காவின் கூடுதல் வரி வேலைக்கு ஆகாது'' - இந்தியா, சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா

உலக நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது. அப்படி எண்ணெய் வாங்கும் இந்தியா, பிரேசில் மீது ஏற்கெனவே கூடுதல் வரியாக 25 சதவிகிதத்தை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால்,... மேலும் பார்க்க

வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் - காவல்துறை கடும் எச்சரிக்கை!

கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தில், புற்றீசல்போல போலி மருத்துவர்களும் உருவாகிவருகின்றனர். `நகரில் சுற்றினால் மாட்டிக் கொள்வோம்’ என்று, இவர்கள் கிராம மக்களைக் குறிவைக்கிறார்கள். கிராமப்பு... மேலும் பார்க்க

``பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜக தான்'' - முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி

நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வர... மேலும் பார்க்க