செய்திகள் :

5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் வீடு ஏற்பாடு!

post image

செபி தலைவர் துஹின் காந்த பாண்டேவுக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பை செபி ஏற்பாடு செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் செபி தலைவராகப் பதவியேற்ற துஹுன் காந்த பாண்டேவுக்கு சொகுசு குடியிருப்பை செபி ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய மும்பையின் பிரபாதேவி பகுதியில், 3,000 சதுரஅடி பரப்பளவில் 5 படுக்கையறை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பை, மாத வாடகையாக ரூ. 7 லட்சத்துக்கு செபி ஏற்பாடு செய்துள்ளது.

4 கார் பார்க்கிங் வசதிகொண்ட இந்தக் குடியிருப்புக்கு வைப்புத்தொகையாக ரூ. 42 லட்சம் செலுத்தப்பட்டதுடன், 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.

செபி அலுவலகத்தில் இருந்து அரைமணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்பின் வாடகையானது, முதலாண்டில் ரூ. 7 லட்சமாகவும், இரண்டாம் ஆண்டில் ரூ. 7.35 லட்சமாகவும், மூன்றாம் ஆண்டில் ரூ. 7.71 லட்சமாகவும் வருடாந்திர உயர்வுடன் செலுத்தப்படும்.

செப்டம்பர் 3 ஆம் தேதியில் பதிவு செய்யப்பட்ட இந்தக் குடியிருப்புக்கு, முத்திரைக் கட்டணமாக மட்டும் 69,500 ரூபாயும், பதிவுக் கட்டணமாக 1,000 ரூபாயும் செலுத்தப்பட்டது.

இதையும் படிக்க:உச்சநீதிமன்ற வாசலிலேயே சாக்கடைக் கழிவை அகற்றிய தொழிலாளர்கள்! ரூ. 5 லட்சம் அபராதம்!

Sebi Rents Luxury Apartment For Chairman At Rs 7 Lakh A Month In Mumbai

மேலும் 474 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத மேலும் 474 அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்தக் கட்சி பதிவுசெய்யப்பட்ட கட்... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மேலும் 5 உடல்கள் மீட்பு: பலி 7ஆக உயர்வு

உத்தரகண்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் புதைந்த மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகண்ட் மாநிலம், கடந்த சில மாதங்களாக மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்புகளால் அவ்வப்ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தங்களின் பயங்கரவாத தலைமையிடம் தகர்க்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாக... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்

மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், மும்பை நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து அதிகாரப்ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! வெற்றி நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே வழக்கம் - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தனது வலிமையை எதிரிக்குக் காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.1965 ஆம் ஆண்டில், பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அம... மேலும் பார்க்க

ராகுல் வேண்டுமென்றே ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

தேர்தல் ஆணையத்திற்கு திரான தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டில் ஜனநாயகத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் ராகுல்காந்தி என பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்ற... மேலும் பார்க்க