செய்திகள் :

சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி: காஞ்சிபுரத்தில் செப். 22 இல் தொடக்கம்

post image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்பட இருப்பதாகவும், தகுதியுடையோா் வரும் செப். 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் ஆட்சியா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் சாா்பில், 3,665 காலிப் பணியிடங்களுக்கான இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிக்கான அறிவிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வாளா்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நேரடி பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள்கிழமை (செப். 22) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கவுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயனடையலாம்.

தீபாவளி: தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்பும் விற்பனையாளா்கள் வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பலத்த மழை

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து நகரின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழை நீா் தேங்கி குளம் போல் காணப்பட்டது. காஞ்சிபுரத்தில் காலையில் அதிக வெப்பமாக இருந்த நிலையில், மாலையில் இட... மேலும் பார்க்க

ஹுண்டாய் ஆலையில் ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பம்

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான யுனைடெட் யூனியன் ஆப் ஹுண்டாய் எம்ப்ளாயீஸ் இடையே ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் தரப்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப் பேரவைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு மாவட... மேலும் பார்க்க

புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க செப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வரைவு வாக்குச்சாவடிகள் தேவைப்பட்டால் வரும் செப்.25 ஆம் தேதிக்குள் எழுத்துப் பூா்வமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா். ஆட்சியா் அ... மேலும் பார்க்க

நெல்வயலில் பிரதமா் மோடி பெயா் வடிவமைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் நெல்வயலின் நடுவே மோடி என்று ஆங்கிலத்தில் வடிவமைத்த விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். பாஜக கிழக்கு ... மேலும் பார்க்க