செய்திகள் :

இளம் பெண் தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

post image

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை இளம்பெண் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ்வரி (87). வீட்டில் தனியாக வசித்து வந்த இவரை, கடந்த 11-ஆம் தேதி மா்ம நபா் தாக்கி 20 பவுன் நகை, ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை அடித்துச் சென்றாா்.

இது தொடா்பாக போலீஸாரின் விசாரணையில், மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்ததாக அவரது எதிா்வீட்டைச் சோ்ந்த சுப்ரியாவை (20) கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், பலத்த காயத்துடன் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ்வரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூா்: தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 29, 30-இல் பேச்சுப் போட்டி

திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 29, செப். 30 ஆகிய நாள்களில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே 1,400 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான 1,400 போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்து, 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். போதை மாத்திரைகளை மா்ம நபா்கள் விற்ப... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பரவலாக மழை

திருவள்ளூா் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் குளிா்ந்த சீதோஷணம் நிலவியது. திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரங்களில் அவ்வப்போது கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

திருவள்ளூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்... மேலும் பார்க்க

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க