செய்திகள் :

ஆந்திரா: 6-ம் வகுப்பு மாணவி தலையில் எலும்பு முறிவு; இந்தி ஆசிரியர் மீது வழக்கு பதிவு- என்ன நடந்தது?

post image

ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி சாத்விகா நாகஸ்ரீ. இவரது தாய் விஜிதா அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சலீமா பாஷா.

Class Room
Class Room

மாணவி சாத்விகா நாகஸ்ரீ வகுப்பறையில் பாட வேளையின்போது குறும்புத்தனம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹிந்தி ஆசிரியர் சலீமா பாஷா புத்தகப் பையால் மாணவியின் தலையில் அடித்துள்ளார். அந்த புத்தகப் பைக்குள் இரும்பு (steel) உணவு பெட்டி இருந்துள்ளது. அதனால் மாணவியின் தலையில் பலத்த அடிபட்டுள்ளது.

இது குறித்து முதலில் மாணவியின் அம்மாவான அறிவியல் ஆசிரியர் விஜிதாவிடம் கூறியுள்ளனர். அதை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் விட்டுள்ளார். பின் மாணவிக்கு கடும் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்கு மாணவியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாத்விகா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மாணவியின் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் காவல் துறையில் ஹிந்தி ஆசிரியர் மீதும் பள்ளி தலைமை ஆசிரியர் (principal) மீதும் புகார் அளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஒரு வழக்கு இதற்கு முன் விசாகப்பட்டினம் மாவட்டம் மதுரவாடாவில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி: மது போதையில் வந்த மகனை திட்டிய மருமகள்; தாக்கி காதை கடித்த மாமியார்... போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம், வீயன்னூர் சாய்கோடு பகுதியை சேர்ந்த தங்கமணியின்மனைவி அல்போன்சாள் (55). தங்கமணி இறந்து விட்டார். அல்போன்சாள் தனியார் பள்ளிக்கூடத்தில் உதவியாளராக வேலை செய்துவருகிறார். இவரது மகன் ப... மேலும் பார்க்க

சேலம்: முன் விரோதம் காரணமாக இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு... அதிர்ச்சி வீடியோ!

சேலம், திருமலைகிரி இடும்பன் வட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வெள்ளிப் பட்டறை தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜீவானந்தம் இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வேடுகத்தாம்பட்டி... மேலும் பார்க்க

திருமணத்துக்கு வற்புறுத்திய கர்ப்பிணி காதலியை கொன்றுவிட்டு 'ஒழிந்தாள்' என ஆட்டம் போட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியைச் சேர்ந்தவர் பக்தி மாயகர் (26). இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது தோழியை பார்க்கச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில... மேலும் பார்க்க

நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கிய கூடலூர் இளைஞர்கள்

கஞ்சா மிட்டாய் கடத்தல்நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. தேசிய அளவிலான வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்தச... மேலும் பார்க்க

அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர விசாரணையில் காவல்துறை!

அமெரிக்க குடியுரிமைப் பெற்ற 71 வயது பெண் இந்தியாவுக்கு திருமணம் செய்துகொள்ள வந்த நிலையில், எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர் (71). இவர் அமெரி... மேலும் பார்க்க

விருதுநகர்: ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கு; 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டாஸ்மாக் முன்னாள் ஊழியர் கைது!

விருதுநகர், காந்திபுரம் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து 1998 ஜனவரி 22-ஆம் தேதி ரூ.150 லஞ்சம் பெற்றதாக டாஸ்மாக் மதுபானக் கிடங்கு உதவியாளர் பிரேம்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார... மேலும் பார்க்க