செய்திகள் :

எச்1பி விசா: அமெரிக்காவுக்கும் பாதிப்பா?

post image

அமெரிக்காவில் புதிதாக எச்1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்திய வெளியான அந்நாட்டு அரசின் அறிவிப்பால், இந்திய தொழில்நுட்பத் துறையினர் மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருக்கும் தொழிலாளர்களில் 71 சதவிகிதத்தினர் (2,83,397) இந்தியர்களே. அக்டோபர் 2024 - செப்டம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், டிசிஎஸ் (TCS) நிறுவனம் மட்டும் 5,500-க்கும் மேற்பட்ட எச்1பி விசாக்களை வழங்கியது. அதனைத் தொடர்ந்து காக்னிசன்ட் - 3,700, இன்ஃபோசிஸ் - 2,004, எல்டிஐ மைன்ட் ட்ரீ - 1,807, எச்.சி.எல். டெக் - 1,728 விசாக்களையும் வழங்கியுள்ளன.

அமெரிக்காவுக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியால், இந்தியாவுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது.

மேலும், புதிய கட்டண அறிவிப்பால் அமெரிக்காவின் வருவாயிலும் பாதிப்பு ஏற்படலாம்.

அமெரிக்க வருவாயில் முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

டிசிஎஸ் - 48%

இன்ஃபோசிஸ் - 58%

எச். சி. எல் டெக் - 66%

விப்ரோ - 63%

டெக் மஹிந்திரா - 51%

இருப்பினும், ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கு டிரம்ப் அரசின் புதிய கட்டண அறிவிப்பு பொருந்தாது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

திருப்பதி உண்டியல் காணிக்கை: ஒரே நாளில் ரூ. 4.59 கோடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமையில் 82,042 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்துக்கு 24 ... மேலும் பார்க்க

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

பிகாா் மாநிலம், கயையில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணுபத கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா். மகாளய பித்ரு பக்ஷ புண்ணிய காலத்தையொட்டி, கயையில் ஃபால்கு ந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் அரசுத் துறைகள் மேல்முறையீடு: கட்டுப்படுத்துவது அவசியம்!- மத்திய சட்டத் துறை அமைச்சா்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசுத் துறைகள் மேல்முறையீடு செய்யும் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா். இதுதொடா்பாக புது தில்... மேலும் பார்க்க

பிற நாடுகள் மீதான சாா்பே மிகப் பெரிய எதிரி! - பிரதமா் மோடி

‘பிற நாடுகள் மீதான சாா்பே, இந்தியாவின் மிகப் பெரிய எதிரி; தற்சாா்பின் வாயிலாகவே இந்த எதிரியை முறியடிக்க முடியும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். சிப் (செமிகண்டக்டா்) முதல் ஷிப் (கப்பல்) வரை... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: 5 கி.மீ. சுரங்கப் பாதை பணி நிறைவு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. ‘இது குறிப்பிடத்தக்க சாதனை’ என்று ரயில்வே துற... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதல்: மணிப்பூரில் தேடுதல் வேட்டை தீவிரம்!

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் இருவரை சுட்டுக் கொன்ற கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க