செய்திகள் :

முன்னாள் முதல்வர் சைகோ! அழைப்பிதழால் ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிருப்தி!

post image

ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சைகோ என்று நந்தமூரி பாலகிருஷ்ணா குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில், ``முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது அம்மாநிலத் திரைத்துறையினரைச் சந்திக்க ஜெகன் மோகன் ரெட்டி மறுத்ததாகவும், பின்னர் நடிகர் சிரஞ்சீவியின் வலியுறுத்தலால் அவர் பேச சம்மதித்ததாகவும்’’ பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ் கூறினார்.

ஆனால், ஸ்ரீனிவாஸின் கருத்தை மறுத்த தெலுங்கு தேசக் கட்சியின் எம்.எல்.ஏ.வும் நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா, ``சைகோவை திரைத்துறை பிரதிநிதிகள் சென்றனர். ஆனால், சிரஞ்சீவியின் வலியுறுத்தலால்தான் ஜெகன் மோகன் ரெட்டி கீழிறங்கி வந்ததாகவும் கூறுவது பொய்’’ என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சைகோ என்று கூறியது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திலிருந்து தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிதழில் தனது பெயரை 9-ஆவது இடத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் பாலகிருஷ்ணா அதிருப்தி தெரிவித்தார்.

இதையும் படிக்க:தவெக தலைவர் விஜய் பிரசாரம் தொடரும்... அட்டவணையில் திடீர் மாற்றம்!

Chandrababu Naidu's MLA Nandamuri Balakrishna Calls Former Andhra CM Jagan Mohan Reddy 'Psycho', Stirs Row

மன அழுத்தத்தில் தள்ளிய கனவு நகரம் பெங்களூரு! வேறு நகரங்களுக்கு படையெடுக்கும் பெங்களூர்வாசிகள்!

போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் தொழில்நுட்பத் துறையின் இதயத் துடிப்பாக, நீண்ட காலமாக இருந்து வரும் பெங்களூரு, ஒரு காலத்தில் பல குடியிருப... மேலும் பார்க்க

மாதா அமிர்தானந்தமயிக்கு கேரள அரசு கௌரவம்!

ஐ.நா. அவையில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், கேர... மேலும் பார்க்க

ஒடிசாவில் ரூ.60,000 கோடியில் மேம்பாட்டுத் திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்!

ஓடிசாவின் ஜர்சுகுடாவில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உ... மேலும் பார்க்க

ஹைதராபாதில் வெள்ளம்! 1000 பேர் வெளியேற்றம்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத்... மேலும் பார்க்க

எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

புது தில்லி: எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது என்று ஐ.நா. அவையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் கூறிய கூற்றுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது கடுமையான கருத்துகளை முன்வைத்திருந்தத... மேலும் பார்க்க

தென் அமெரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டார் ராகுல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.தென் அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் ... மேலும் பார்க்க