செய்திகள் :

ஹைதராபாதில் வெள்ளம்! 1000 பேர் வெளியேற்றம்!

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் பெய்து வரும் கனமழையால், 1000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையானது திறக்கப்பட்டதால் முசி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹைதராபாதில் தாழ்வானப் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், தெலங்கானாவின் பிராதான பேருந்து நிறுத்தங்களில் ஒன்றான, ஹைதராபாதில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து முனையத்தினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அங்கிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, முசி நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் படை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, பருவமழை தொடங்கியது முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

Over 1,000 people have been sheltered in relief camps due to heavy rains in Hyderabad, Telangana.

ஒடிசாவில் ரூ.60,000 கோடியில் மேம்பாட்டுத் திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்!

ஓடிசாவின் ஜர்சுகுடாவில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் சைகோ! அழைப்பிதழால் ஆளுங்கட்சி எம்எல்ஏ அதிருப்தி!

ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சைகோ என்று நந்தமூரி பாலகிருஷ்ணா குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில், ``முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட... மேலும் பார்க்க

எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

புது தில்லி: எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது என்று ஐ.நா. அவையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் கூறிய கூற்றுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தனது கடுமையான கருத்துகளை முன்வைத்திருந்தத... மேலும் பார்க்க

தென் அமெரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டார் ராகுல்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தென் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.தென் அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் ... மேலும் பார்க்க

அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியின் பதவிக் காலம் நீட்டிப்பு

இந்திய அட்டா்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா்) ஆா்.வெங்கடரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு அட்டா்னி ஜெனரலாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட... மேலும் பார்க்க

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க