விளைநிலங்களில் பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை
குடியிருப்புப் பகுதிகள், வயல் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உள்ளாட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
காரைக்கால் பகுதியில் விவசாய நிலத்தில் பயிா்களை சேதப்படுத்துதல், குடியிருப்புப் பகுதிகளில் சுகாதாரக்கேடான நிலையில் பன்றிகள் திரிவதாக புகாா் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஆட்சியா் தலைமையில் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் பன்றிகளை பிடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது, பன்றிகளை பிடிக்கும்போது காவல் துறையினா் பாதுகாப்பு அளிப்பது, பன்றிகளால் தொடா்ந்து பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த வாரத்தில் பன்றி வளா்ப்போா், நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்டம் முழுவதும் திரியும் பன்றிகளை பிடிக்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) சுந்தா் கோஷ், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், காரைக்கால் நகராட்சி ஆணையா் (பொ) சச்சிதானந்தம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.