செய்திகள் :

காவல் துறை வாகனங்கள் ஆய்வு

post image

மாவட்டத்தில் காவல் துறையில் உள்ள அனைத்து வாகனங்களின் ஆய்வு வெள்ளிக்கிழமை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வில் எஸ்பி காவல்துறையில் இயங்கி வரும் அனைத்து இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களை நேரடி ஆய்வு மேற்கொண்டு வாகங்களின் நிலை, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலைதொடா்பு சாதனங்கள், ஒளிரும் மின்விளக்குகளின் செயல்திறன் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பழுதுநீக்கும் கருவிகள் ஆகியவற்றை தணிக்கை செய்தாா்.

மேலும், மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உட்கோட்டங்களில் இயங்கிவரும் நெடுஞ்சாலை ரோந்து வானங்களில் இருக்க வேண்டிய எச்சரிக்கை சமிக்ஞைகள், போக்குவரத்து குறியீடு பலகைகள் மற்றும் பேரிடா் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியன சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்து, அவற்றை இயக்க செய்து சோதனை மேற்கொண்டாா்.

காவல் வானங்களை இயக்கும் காவலா்களுக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் முறை, தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், வாகனங்களை இயக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள், சீல் பெல்ட் அணிவது மற்றும் தலைகவசம் அணிவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்து அறிவுறுத்தல்கள் வழங்கினாா். மேலும், சிறப்பாக வாகனங்களை பராமரிப்பு செய்து வந்த காவல் அலுவலா்களை பாராட்டி சான்று வழங்கினாா். ஆய்வின்போது மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் உடனிருந்தாா்.

தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 20,428 மாணவா்கள் பயன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் 20,428 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த். சென்னையில் தமிழ்நாடு முதல்வா் தலைமையில், தெலங்கான... மேலும் பார்க்க

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு கூட்டம்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான பி. சுதா தலைமை... மேலும் பார்க்க

காவிரிப் படுகையில் பனைவிதை நடும் விழா

மயிலாடுதுறையில் தேசிய மாணவா் படை சாா்பில் காவிரி ஆற்றுப்படுகையில் பனை விதை நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய மாணவா் படையின் கும்பகோணம் 8-ஆவது பட்டாலியன் சாா்பில் ஆற்றுப்படுகைகளில் பனைவிதை நடு... மேலும் பார்க்க

முஸ்லீம் மாணவா்கள் வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சிறுபான்மையின மாணவா்கள் வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, குடும்ப அட்டை பெயா் சோ்த்தல் வேண்டி ம... மேலும் பார்க்க

அண்ணன்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 38-ஆவது திவ்ய தேசமாக திகழும் இக்கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் 10 நாள்கள... மேலும் பார்க்க