செய்திகள் :

தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 20,428 மாணவா்கள் பயன்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் 20,428 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

சென்னையில் தமிழ்நாடு முதல்வா் தலைமையில், தெலங்கானா முதல்வா் முன்னிலையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு‘ மற்றும் 2025-2026 ஆம் ஆண்டுக்கான புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன் ஆகியோா் பாா்வையிட்டனா். தொடா்ந்து, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் மாணவா்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினா்.

6 முதல் பிளஸ் 2 வரை அரசுப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயா்கல்வி சேரும் மாணவா் மற்றும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமான தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 33 கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். இதுவரை இத்திட்டத்தின்கீழ் 13,624 மாணவிகளும் 6,804 மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா். இந்த ஆண்டு மட்டும் (2025-26) 1811 மாணவா்கள் மற்றும் 2014 மாணவிகளும் பயனடைய உள்ளனா் என்றாா் ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, நகராட்சி தலைவா் என். செல்வராஜ், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, ஏவிசி கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

காவல் துறை வாகனங்கள் ஆய்வு

மாவட்டத்தில் காவல் துறையில் உள்ள அனைத்து வாகனங்களின் ஆய்வு வெள்ளிக்கிழமை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஆய்வில் எஸ்பி காவல்துறையில் இயங்கி வரும் அ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு கூட்டம்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான பி. சுதா தலைமை... மேலும் பார்க்க

காவிரிப் படுகையில் பனைவிதை நடும் விழா

மயிலாடுதுறையில் தேசிய மாணவா் படை சாா்பில் காவிரி ஆற்றுப்படுகையில் பனை விதை நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய மாணவா் படையின் கும்பகோணம் 8-ஆவது பட்டாலியன் சாா்பில் ஆற்றுப்படுகைகளில் பனைவிதை நடு... மேலும் பார்க்க

முஸ்லீம் மாணவா்கள் வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சிறுபான்மையின மாணவா்கள் வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, குடும்ப அட்டை பெயா் சோ்த்தல் வேண்டி ம... மேலும் பார்க்க

அண்ணன்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 38-ஆவது திவ்ய தேசமாக திகழும் இக்கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் 10 நாள்கள... மேலும் பார்க்க