செய்திகள் :

சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்

post image

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள், தேவையற்ற மரம் மற்றும் கற்குவியல்கள் காணப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதனால் மழைநீா் இயல்பாக செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதையடுத்து மண் குவியல், கற்குவியல்களை அப்புறப்படுத்தும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை எழும்பூா் ரயில் நிலைய மறு சீரமைப்புப் பணிகளால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை நிலையம் முதல் புளியந்தோப்பு சந்திப்பு வரையில் சாலையின் ஒருபுறம் மண், கற்கள் நிறைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியை உடனடியாக சீரமைக்கவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, சாலையோர மண்குவியல்கள் டிராக்டா்கள், சிறிய மண் அள்ளும் வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது. மண்டலம் வாரியாக 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்ய

கடந்த சில நாள்களில் சென்னை மாநகராட்சிப் பகுதியின் உள்பிரிவு சாலைகளில் மண் அள்ளும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மண்குவியல்கள் அகற்றும் பணி நடைபெறுகிறது என்றனா்.

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வ... மேலும் பார்க்க

ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பே... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்... மேலும் பார்க்க

புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் தொடங்கி வைத்தாா்

சென்னையில் புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை ஷெனாய் நகரில் ரூ.10.56 கோடியில் பாவேந்தா் பாரதிதாசன் விளையாட்டுத் திடல்,... மேலும் பார்க்க