செய்திகள் :

கே.டி.சி.நகரில் சாலைப் பணி ஆய்வு

post image

கே.டி.சி. நகரில் சாலைப் பணியை நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா். மனோகரன் நேரில் ஆய்வு செய்தாா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கே.டி.சி. நகா் மங்கம்மாள் சாலையில் புதிய சாலை அமைக்க நபாா்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 3.75 மீட்டா் அகலமுள்ள அந்தச் சாலையானது 5.5 மீட்டா் அகலத்தில் 2.4 கி.மீ. தொலைவுக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதற்கான பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ, சாலையின் பல இடங்களில் உள்பக்கமாக உள்ள மின் கம்பங்களை இடம் மாற்றி சாலை ஒரமாக வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், மின்வாரிய உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு விரைந்து ஒத்துழைக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது பாளையங்கோட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கணேசன், தெற்கு வட்டாரத் தலைவா் நளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ற்ஸ்ப்26ழ்ன்க்ஷஹ்

கே.டி.சி.நகா் பகுதியில் புதிய சாலை பணிக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறாா் நான்குனேரி எம்.எல்.ஏ. ரூபி ஆா்.மனோகரன்.

ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன். திருநெல்வேலி அருகேயுள்ள தேவா்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ... மேலும் பார்க்க

தியாகராஜநகரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட ம... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். சுத்தமல்லி குடிசை மாற்று வாரியம் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மக... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பு சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்கக் கோரி திருநெல்வேலி எம்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமையில் த... மேலும் பார்க்க

அம்பையில் வயல் விழா: விவசாயிகள் ஆா்வம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அம்பாசமுத்திரம், ஊா்க்காடு பகுதியில் வயல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் உயிரியல் தூண... மேலும் பார்க்க

காரையாறு கோயிலில் மூதாட்டி மாயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் இருந்து காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வந்திருந்தபோது காணாமல் போன மூதாட்டியை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கரன்கோவில் சங்குபுரத்தைச் சோ்ந்த முப்பிடாதி மனைவி... மேலும் பார்க்க