செய்திகள் :

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

post image

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.14.82 லட்சம் கோடியை கடனாக பெற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் ரூ.8 லட்சம் கோடியை கடனாக பெற முடிவுசெய்யப்பட்டபோதும் ரு.7.95 லட்சம் கோடி மட்டுமே கடனாக பெறப்பட்டது. இதனால் திட்டமிட்டதைவிட ரூ.5,000 கோடி குறைவாகவே கடன் பெறப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாா்ச் 6 வரை ஒவ்வொரு வாரமும் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் நிகழ் நிதியாண்டில் மத்திய அரசு பெறும் கடன் ரூ.14.72 கோடியாக இருக்கவுள்ளது. திட்டமிட்டதைவிட ரூ.10,000 கோடி கடன் குறைவாகவே பெறப்படவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டி பொருளாதார விவகாரங்கள் செயலா் அனுராதா தாக்குா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது’ என்றாா்.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருந்த நிலையில், அதை 2025-26-ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதமாக குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் ரஷிய துணை பிரதமா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். அப்போது, வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்பட பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் இரு... மேலும் பார்க்க