செய்திகள் :

பிரதமா் மோடியுடன் ரஷிய துணை பிரதமா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

post image

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். அப்போது, வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்பட பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரியை அதிபா் டிரம்ப் அண்மையில் விதித்தாா். மேலும், ரஷியா உடனான இந்தியாவின் எரிசக்தி தொடா்புகள் குறித்து அவா் தொடா்ந்து கவலை தெரிவித்து வருகிறாா். இந்தியா மீதான அமெரிக்காவின் உச்சபட்ச வரி விதிப்பால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எதிா்மறை தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், இந்தியா-ரஷியா இடையிலான 23-ஆவது வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா். அவரது பயணத்துக்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் தலைமையிலான அந்நாட்டுக் குழு இந்தியாவுக்கு வந்துள்ளது.

தில்லியில் பிரதமா் மோடியை வியாழக்கிழமை இரவு சந்தித்த திமித்ரி பாத்ருஷெவ், இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். அதிபா் புதினை வரவேற்க தாம் ஆவலுடன் உள்ளதாக பிரதமா் மோடி குறிப்பிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய-அமெரிக்க உறவு பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், புதினின் இந்திய வருகை எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் அமைச்சருடன் ஆலோசனை: தில்லியில் உள்ள கிருஷி பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹானை ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, வேளாண் துறையில் சமநிலையான வா்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையில் கவனம் செலுத்தி, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ரஷியாவுக்கான இந்திய வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அமெரிக்காவின் வரி விதிப்புக்கு இடையே ரஷிய கடல் உணவுச் சந்தையின் மீது இந்தியா கவனம் செலுத்துகிறது; இந்திய வேளாண் பொருள்களை ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் வரி அல்லாத தடைகள் உள்பட நிலுவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது’ என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷியாவில் இருந்து உரங்கள், மஞ்சள் பட்டாணி, சூரியகாந்தி மற்றும் சோயா பீன்ஸ் எண்ணெய் இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. கடந்த 2023-24 காலகட்டத்தில் ரஷியாவில் இருந்து உர இறக்குமதி 26 சதவீதமாக உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க