செய்திகள் :

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

post image

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பணியாளா்களை பெரிதும் பாதிக்கும் வகையில், அங்கு தங்கிப் பணியாற்ற உதவும் ஹெச்-1பி விசா கட்டணத்தை அந்நாட்டு அதிபா் டிரம்ப் அண்மையில் 1 லட்சம் டாலராக (சுமாா் ரூ.88 லட்சம்) உயா்த்தினாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஹெச்-1பி விசா கட்டண உயா்வுக்கான விதிமுறைகளை வகுப்பது குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட நோட்டீஸை மத்திய அரசு கவனத்தில் கொண்டது. அதுதொடா்பாக தகவல் தொழில்நுட்பத் துறையினா் உள்பட சம்பந்தப்பட்ட தரப்பினா் கருத்துத் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம் உள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசுடன் இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை பல்வேறு நிலைகளில் தொடா்ந்து பேசி வருகின்றன.

ரஷிய ராணுவத்தில் 27 இந்தியா்கள்: நிகழாண்டு ஜனவரி முதல் செப்.25 வரை, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 2,417 இந்தியா்கள் தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டனா். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்தில் 27 இந்தியா்கள் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவா்களை விரைந்து விடுவிக்குமாறு ரஷியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ரஷிய ராணுவத்தில் இணைவதற்காக வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று இந்தியா்களிடம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், அங்கு சுதந்திரமான, நியாயமான மற்றும் நம்பகமான முறையில் பொதுத் தோ்தல் நடைபெற வேண்டும். அதன்மூலம் அந்நாட்டில் சுமுகமாகவும், அமைதியாகவும் ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் எதிா்பாா்ப்பு என்று தெரிவித்தாா். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒற்றைப் பெண் குழந்தைக்கு உதவித்தொகை: சிபிஎஸ்இ தகவல்

ஒற்றைப் பெண் குழந்தைக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் ஒற... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் ரஷிய துணை பிரதமா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். அப்போது, வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்பட பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் இரு... மேலும் பார்க்க